75வது பிறந்தநாள்: எங்கு இருக்கிறார் ரஜினிகாந்த்? | பிளாஷ்பேக் : சம்பளம் வாங்காமல் நடித்த சிவாஜி, பத்மினி, சாவித்திரி | பிளாஷ்பேக் : நிஜ பாம்புடன் துணிச்சலாக நடித்த ஜெயசித்ரா | படையப்பாவின் படிக்கட்டுகள்... : ரஜினி 75, 50 ஸ்பெஷல் | 'திரிஷ்யம் 3' படத்தில் முக்கிய வேடத்தில் சுனில் | என்னை அழைத்தது வில்லனாக நடிக்க அல்ல; 'பென்ஸ்' பட ட்விஸ்ட் உடைத்த நிவின்பாலி | 23வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது: ரஜினிக்கு விருது | ஆரோக்கியமான வாழ்க்கை, வயதை வென்ற வசீகரம் : ரஜினிக்கு பிரதமர், முதல்வர் வாழ்த்து | பிரித்விராஜின் அண்ணன் படம் வளைகுடா நாடுகளில் வெளியாக தடை | 30வது கேரள சர்வதேச திரைப்பட விழாவின் முதல் பிரதிநிதியாக கவுரவிக்கப்பட்ட நடிகை லிஜோமோல் ஜோஸ் |

துல்கர் சல்மான், பாக்யஸ்ரீ, சமுத்திரக்கனி, ராணா நடிக்கும் ‛காந்தா' என்ற படம், தமிழ், தெலுங்கில் நவம்பர் 14ல் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் கதை, தமிழின் முதல் சூப்பர் ஸ்டாரான தியாகராஜ பாகவதர் வாழ்க்கையை தழுவி எடுக்கப்படுகிறது என்று தகவல். அவரின் வாழ்க்கையில் எந்த பாகத்தை எடுக்கிறார்கள் என்பது சஸ்பென்ஸ் ஆக இருக்கிறது.
தியாகராஜ பாகவதரின் வாழ்க்கையில் சில இருண்ட பக்கங்கள், சர்ச்சைகளும் உண்டு என்பதால், அதை தொட்டு இருக்கிறாரோ இயக்குனர் செல்வமணி செல்வராஜ் என்பது பலரின் கேள்வியாக இருக்கிறது. ஓடிடியில் வெளியான தி ஷன்ட் பார் வீரப்பன் என்ற கதையை இயக்கியவர் செல்வமணி செல்வராஜ்.
இதேபோல், தமிழில் லட்சுமி காந்தன் கொலை வழக்கு என்ற பெயரிலும் ஒரு படம் தயாராகி வருகிறது. தியாகராஜ பாகவதர் சிறைக்கு செல்ல காரணமாக இருந்தது, பத்திரிகையாளர் லட்சுமிகாந்தன் கொலை வழக்கு, அதை தழுவி இந்த படம் உருவாகிறது என கேள்வி. தயாள் பத்மநாபன் இயக்கும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளனர். வரலட்சுமி நடித்த கொன்றால் பாவம் மற்றும் மாருதிநகர் போலீஸ் ஸ்டேஷன் படங்களை இயக்கியவர் தயாள் பத்மநாபன்