நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

துல்கர் சல்மான், பாக்யஸ்ரீ, சமுத்திரக்கனி, ராணா நடிக்கும் ‛காந்தா' என்ற படம், தமிழ், தெலுங்கில் நவம்பர் 14ல் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் கதை, தமிழின் முதல் சூப்பர் ஸ்டாரான தியாகராஜ பாகவதர் வாழ்க்கையை தழுவி எடுக்கப்படுகிறது என்று தகவல். அவரின் வாழ்க்கையில் எந்த பாகத்தை எடுக்கிறார்கள் என்பது சஸ்பென்ஸ் ஆக இருக்கிறது.
தியாகராஜ பாகவதரின் வாழ்க்கையில் சில இருண்ட பக்கங்கள், சர்ச்சைகளும் உண்டு என்பதால், அதை தொட்டு இருக்கிறாரோ இயக்குனர் செல்வமணி செல்வராஜ் என்பது பலரின் கேள்வியாக இருக்கிறது. ஓடிடியில் வெளியான தி ஷன்ட் பார் வீரப்பன் என்ற கதையை இயக்கியவர் செல்வமணி செல்வராஜ்.
இதேபோல், தமிழில் லட்சுமி காந்தன் கொலை வழக்கு என்ற பெயரிலும் ஒரு படம் தயாராகி வருகிறது. தியாகராஜ பாகவதர் சிறைக்கு செல்ல காரணமாக இருந்தது, பத்திரிகையாளர் லட்சுமிகாந்தன் கொலை வழக்கு, அதை தழுவி இந்த படம் உருவாகிறது என கேள்வி. தயாள் பத்மநாபன் இயக்கும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளனர். வரலட்சுமி நடித்த கொன்றால் பாவம் மற்றும் மாருதிநகர் போலீஸ் ஸ்டேஷன் படங்களை இயக்கியவர் தயாள் பத்மநாபன்