மீண்டும் இணையும் விஜய் சேதுபதி - தியாகராஜன் குமாரராஜா! நாளை பர்ஸ்ட் லுக்! | 'துரந்தர்' 2ம் பாகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்! - பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் | 'இருமுடி' படத்தில் காவேரி ஆக பிரியா பவானி சங்கர்! | பாலகிருஷ்ணா 111வது படத்தில் நயன்தாரா மாற்றமில்லை! | நானி, வெங்கி அட்லூரி கூட்டணி படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பான் இந்தியா படங்களோடு மோதும் கென் கருணாஸின் 'யூத்' | மீண்டும் விஜய் பட தலைப்பில் புதிய பட அறிவிப்பு! | "எமோ எமோ இதி" ரோசன் மெக்கா, பிரீத்தி முகுந்தன் புதிய தெலுங்கு பட அறிவிப்பு! | "மகான் 2ம் பாகம் உருவாகிறது" - கார்த்திக் சுப்பராஜ் தகவல்! | சிவகார்த்திகேயன் படத்தில் கதாநாயகி, இசையமைப்பாளர் யார் தெரியுமா? |

ஹிந்தியில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்த 'தம்மா' படம் தீபாவளிக்கு திரைக்கு வந்துள்ள நிலையில் அடுத்தபடியாக நவம்பர் 14ம் தேதி தெலுங்கில் அவர் நடித்துள்ள 'தி கேர்ள் பிரண்ட்' படம் திரைக்கு வரப்போகிறது. இந்த நிலையில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், ''காதல் தோல்வி ஏற்பட்டு காதலர்கள் பிரிந்தால் ஆண்களை விட பெண்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் ஆண்களை பொறுத்தவரை தங்களது காதல் தோல்வியை வெளிப்படுத்த தாடி வளர்க்கிறார்கள். சரக்கு அடித்து காதல் தோல்வியை மற்றவர்களுக்கு வெளிப்படுத்துகிறார்கள்.
அதேசமயம் பெண்களை பொறுத்தவரை தாடி வளர்க்க முடியாது. சரக்கு அடிக்க முடியாது. அதனால் மனதளவில் தங்களுக்குள்ளேயே மிகப் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறார்கள். யாருக்கும் தெரியாமல் சோகத்தை தங்களுக்குள் மறைத்துக்கொள்கிறார்கள். காதல் தோல்வியை மற்றவர்களுக்கு வெளிப்படுத்த பெண்களுக்கு வாய்ப்பு கிடைக்காததால் ஆண்கள் அளவுக்கு பெண்கள் காதல் பிரிவை நினைத்து கவலைப்படுவதில்லை என்று ஒரு கருத்து நிலவிக் கொண்டிருக்கிறது,'' என தெரிவித்திருக்கிறார் ராஷ்மிகா மந்தனா.
மேலும், தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகாவும் காதலித்து வருவதாக கூறப்படும் நிலையில் அவர்கள் இருவருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்று விட்டதாகவும், பிப்ரவரி மாதம் அவர்களின் திருமணம் நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.