நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ, சரத்குமார் ஆகியோர் நடித்து தீபாவளியை முன்னிட்டு கடந்தவாரம் வெளியான படம் ‛டியூட்'. இளைஞர்களை கவரும் விதமாக வந்துள்ள இப்படம் ரூ.100 கோடி வசூலை நெருங்கி உள்ளது. 5 நாளில் 95 கோடி வசூலை உலகளவில் ஈட்டியுள்ளது.
இந்நிலையில் சென்னையில் நடந்த டியூட் படம் நன்றி அறிவிப்பு விழாவில் ஹீரோ பிரதீப் ரங்கநாதன் பேசியது : தமிழகம் மட்டுமல்ல ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ,கேரளா மற்றும் பல வெளிநாடுகளில் இந்த படம் வெற்றி அடைந்துள்ளது. அனைவருக்கும் நன்றி. இந்த படம் சில விவாதங்களை உருவாக்கி உள்ளது. சிலருக்கு கதையில் மாற்று கருத்து உள்ளது. ஆனாலும் படத்தை மீண்டும் மீண்டும் பார்க்கும் போது வேறொரு விஷயம் தெரிய வரும். இரண்டாவது மூன்றாவது முறை பார்ப்பவர்கள் படத்தை வேறு மாதிரி பீல் பண்ணுகிறார்கள். இந்த படம் பல ஆண்டுகளுக்கு பார்க்கப்பட்டு கொண்டே இருக்கும் என நம்புகிறேன். இப்படி ஒரு ஸ்கிரிப்ட் கொடுத்த இயக்குனர் கீர்த்தீஸ்வரனுக்கு நன்றி.
15 ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் பார்த்த சரத்குமாரை இதில் பார்க்கிறோம். சுப்ரீம்ஸ்டார் கம்பேக் எனலாம். அதேப்போல் ஹீரோயின் மமிதா பைஜூ சிறப்பாக நடித்துள்ளார். அவரின் சின்ன சின்ன நடிப்பு அசைவுகளை கூட பாராட்டுகிறார்கள். சாய் அபயங்கரின் இசை மற்றும் பாடல்கள் படத்துக்கு பெரிய பிளஸ் ஆக அமைந்துள்ளது. இன்னும் படம் ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் எனக்கு புது ரசிகர்கள் நிறைய பேர் கிடைத்திருக்கிறார்கள் அவர்களுக்கும், படத்தை தமிழ்நாட்டில் வெளியிட்ட ஏஜிஎஸ் நிறுவனத்திற்கும் நன்றி.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.