ராஜா சாப் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு : டிச., 5ல் வெளியாகிறது | கன்னட மொழியை சிறுமைப்படுத்தவில்லை : நடக்கும் பிரச்னை வேதனை அளிப்பதாக கமல் அறிக்கை | பரமசிவன் பாத்திமாவுக்கு மறு தணிக்கையில் 'ஏ ' சான்றிதழ் | பிளாஷ்பேக்: ஹீரோயின்கள் ஆன லலிதா, பத்மினி | தமிழுக்கு வரும் ஸ்ராவணி ஷெட்டி | பிலிம் சேம்பர் மூலம் கட்டண உயர்வுக்கு விண்ணப்பித்த பவன் கல்யாண் படத் தயாரிப்பாளர் | பிளாஷ்பேக் : விசு இயக்கிய கமர்சியல் ஆக்சன் படம் | ஜுன் 5, 6ல் 4 படங்கள் ரிலீஸ் | கன்னட, தமிழ் விவகாரம் : கமல் மன்னிப்பு கேட்டால் என்ன...? : 2:30 மணி வரை கெடு விதித்த கர்நாடகா ஐகோர்ட் | சினிமாவில் பிஸி, அதேசமயம்... கார்த்தியின் மறுபக்கம் |
‛பாகுபலி' பட புகழ் ராணா டகுபதியும், ‛கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், சீதா ராமம்' படங்களின் புகழ் துல்கர் சல்மானும் இணைந்து தயாரிக்கும் புதிய படம் ‛காந்தா'. இதை செல்வமனி செல்வராஜ் இயக்குகிறார். இந்த படத்தை தயாரிப்பதுடன் நாயகனாகவும் நடிக்கிறார் துல்கர் சல்மான். மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது. விரைவில் அதுபற்றிய அறிவிப்பை படக்குழுவினர் ஒவ்வொன்றாக வெளியிட உள்ளனர். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பன்மொழிகளில் இந்த படம் உருவாகிறது.
“நல்ல சினிமாவின் சக்தியை நினைவூட்டும் வகையில் சிறப்பான கதையை கண்டறிவது அரிதான காரியம். காந்தா அதுபோன்ற ஒரு கதை தான். இதுவே எங்களை இணைய செய்திருக்கிறது. இந்த பயணத்தை துவங்குவதில் மிகவும் ஆர்வமாக இருக்கிறோம்'' என ராணா தெரிவித்துள்ளார்.