மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

‛பாகுபலி' பட புகழ் ராணா டகுபதியும், ‛கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், சீதா ராமம்' படங்களின் புகழ் துல்கர் சல்மானும் இணைந்து தயாரிக்கும் புதிய படம் ‛காந்தா'. இதை செல்வமனி செல்வராஜ் இயக்குகிறார். இந்த படத்தை தயாரிப்பதுடன் நாயகனாகவும் நடிக்கிறார் துல்கர் சல்மான். மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது. விரைவில் அதுபற்றிய அறிவிப்பை படக்குழுவினர் ஒவ்வொன்றாக வெளியிட உள்ளனர். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பன்மொழிகளில் இந்த படம் உருவாகிறது.
“நல்ல சினிமாவின் சக்தியை நினைவூட்டும் வகையில் சிறப்பான கதையை கண்டறிவது அரிதான காரியம். காந்தா அதுபோன்ற ஒரு கதை தான். இதுவே எங்களை இணைய செய்திருக்கிறது. இந்த பயணத்தை துவங்குவதில் மிகவும் ஆர்வமாக இருக்கிறோம்'' என ராணா தெரிவித்துள்ளார்.