சிரஞ்சீவியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ராம்கோபால் வர்மா | பிளாஷ்பேக்: “பராசக்தி”க்கு முன் வெளிவர இருந்த சிவாஜியின் “பூங்கோதை” | அப்பா படத்தையடுத்து மகன் படத்தின் அப்டேட் | ‛ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா உறுதி : எங்கே தெரியுமா? | மீண்டும் ‛டக்கர்' பட இயக்குனருடன் கைகோர்த்த சித்தார்த்! | ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணைந்து நடித்துள்ள கணவர், மனைவி! | ‛ரெட்ட தல' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ரஜினி, அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சம்பளத்துக்கு கட்டுப்பாடு? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி | சைபர் கிரைம் போலீஸில் அனுபமா பரமேஸ்வரன் புகார் | சம்பளத்தை உயர்த்திய நடிகர் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி |

ஜெமினி கணேசன் இரண்டு வேடங்களில் நடித்த படம் மிகவும் குறைவு. அவற்றில் முக்கியமான படம் 'மனம்போல மாங்கல்யம்'. இந்த படத்தை பி.புல்லையா இயக்கினார். அடிகபள்ளி ராமராவ் இசை அமைத்தார்.
ஜெமினி கணேசனுடன், சாவித்ரி, சுரபி பாலசரஸ்வதி, சந்தானலட்சுமி, கே.சாரங்கபாணி உள்படபலர் நடித்தனர்.
தீவிரமாக காதலிக்கும் ஜெமினி கணேசன், சாவித்ரிக்கு இடையில் ஜெமினி கணேசன் போன்ற தோற்றம் கொண்ட ஒருவர் மனநல மருத்துவமனையில் இருந்து தப்பி வந்து நுழைந்தால் எப்படி இருக்கும் என்பதை நகைச்சுவையாக சொன்ன படம்.
படம் வெளியாகி பெரிய வெற்றியை பெற்றது. ஜெமினி கணேசன் நடிப்பில் வெளிவந்த படங்களில் வணிக ரீதியாக பெரிய வெற்றியை பெற்ற படம் இது. இந்த படத்தில் நடிக்கும்போது வெறும் கே.கணேஷ் என்ற பெயரிலேயே நடித்தார். வயதுக்கு மீறிய தோற்றம் கொண்டவர் என்ற விமர்சனம் ஜெமினி மீது இருந்தது. அதை மாற்றிய படம் இது.