ஆண்களுக்கும் 'பீரியட்ஸ்' ; சலசலப்பை கிளப்பிய ராஷ்மிகாவின் கருத்துக்கு பெருகும் ஆதரவு | ரூ.100 கோடி வசூலை குவித்த 'டியூட்' முதல் வரிசை கட்டும் இந்த வார ஓடிடி ரிலீஸ்....! | பிரதமர் மோடியின் அம்மா வேடத்தில் நடிக்கும் ரவீனா டாண்டன் | ஜேசன் சஞ்சய் எடுத்த சரியான முடிவு : விக்ராந்த் வெளியிட்ட தகவல் | உபேந்திரா-பிரியங்கா திரிவேதி மொபைல் போன்களை ஹேக் செய்த பீஹார் வாலிபர் கைது | லோகா படத்தின் புதிய பாகத்தில் மம்முட்டி : துல்கர் சல்மான் தகவல் | நாகார்ஜுனா மீதான அவதூறு கருத்துக்கு ஒரு வருடம் கழித்து வருத்தம் தெரிவித்த தெலுங்கானா அமைச்சர் | சின்மயியிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்த ஜானி மாஸ்டரின் மனைவி | 'ஜனநாயகன்' வாங்குவதில் வினியோகஸ்தர்கள் தயக்கம் ? | ராஜமவுலி, மகேஷ்பாபு பட தலைப்பு அறிவிப்பு விழா, பிரம்மாண்ட ஏற்பாடுகள் |

ஜெமினி கணேசன் இரண்டு வேடங்களில் நடித்த படம் மிகவும் குறைவு. அவற்றில் முக்கியமான படம் 'மனம்போல மாங்கல்யம்'. இந்த படத்தை பி.புல்லையா இயக்கினார். அடிகபள்ளி ராமராவ் இசை அமைத்தார்.
ஜெமினி கணேசனுடன், சாவித்ரி, சுரபி பாலசரஸ்வதி, சந்தானலட்சுமி, கே.சாரங்கபாணி உள்படபலர் நடித்தனர்.
தீவிரமாக காதலிக்கும் ஜெமினி கணேசன், சாவித்ரிக்கு இடையில் ஜெமினி கணேசன் போன்ற தோற்றம் கொண்ட ஒருவர் மனநல மருத்துவமனையில் இருந்து தப்பி வந்து நுழைந்தால் எப்படி இருக்கும் என்பதை நகைச்சுவையாக சொன்ன படம்.
படம் வெளியாகி பெரிய வெற்றியை பெற்றது. ஜெமினி கணேசன் நடிப்பில் வெளிவந்த படங்களில் வணிக ரீதியாக பெரிய வெற்றியை பெற்ற படம் இது. இந்த படத்தில் நடிக்கும்போது வெறும் கே.கணேஷ் என்ற பெயரிலேயே நடித்தார். வயதுக்கு மீறிய தோற்றம் கொண்டவர் என்ற விமர்சனம் ஜெமினி மீது இருந்தது. அதை மாற்றிய படம் இது.