தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

கன்னடத்தில் ரிஷப் ஷெட்டி இயக்கம், நடிப்பில் வெளியாகி பான் இந்தியா அளவில் வரவேற்பை பெற்ற படம் ‛காந்தாரா'. குறைந்த பட்ஜெட்டில் உருவாகி 400 கோடி வசூலை குவித்தது. தற்போது இதன் இரண்டாம் பாகம் காந்தாரா படத்தின் முந்தைய கதையில் ‛காந்தாரா சாப்டர் 1' என்ற பெயரில் உருவாகி உள்ளது. முக்கிய வேடத்தில் ருக்மணி வசந்த் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் இதன் டிரைலரை பான் இந்திய அளவில் வெளியிட்டுள்ளனர். தமிழ் டிரைலரை சிவகார்த்திகேயன், தெலுங்கு டிரைலரை பிரபாஸ், ஹிந்தி டிரைலரை ஹிருத்திக் ரோஷன் ஆகியோர் வெளியிட்டனர். டிரைலர் பார்க்கவே பிரமாண்டமாய், மிரட்டலாய் உள்ளது. காந்தாரா படத்தின் முந்தைய பாக கதை என்பதால் சரித்திர பின்னணியில் இப்படம் உருவாகி உள்ளது.
வன நிலத்தில் உள்ள பூர்வ குடி மக்களுக்கும், மன்னனுக்குமான மோதல் தான் கதை என டிரைலரை பார்க்கையில் புரிகிறது. குறிப்பாக குலிகா தெய்வத்தின் பின்னணி, அதுதொடர்பான காட்சிகள், சரித்திர பின்னணியில் நகரும் காட்சி அமைப்புகள், போர்கள் என டிரைலரை பார்க்கும்போதே படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது. அக்., 2ல் படம் உலகம் முழுக்க வெளியாகிறது.