கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் | அஜித் 64 அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள் | 26வது பிறந்தநாளை தந்தையுடன் கொண்டாடிய திலீப் மகள் ; தாயுடன் பத்து வருடமாக பாராமுகம் | போலி 'ஏஐ' வீடியோக்கள் : 'துரந்தர்' இயக்குனர் ஆதித்ய தர் எச்சரிக்கை | இனி இந்த ஜானரில் படங்களை இயக்கப் போவதில்லை ; இயக்குனர் பிரியதர்ஷன் முடிவு | உஸ்தாத் பகத்சிங் : ரூ.100 கோடி மேல் நஷ்டம் வருமா? |

இயக்குனர்களில் ஜாம்பவானாக இருந்த பாலு மகேந்திராவும், நடிகர்களில் ஜாம்பவானாக இருந்த ரஜினிகாந்தும் இணைந்த ஒரே படம் 'உன் கண்ணில் நீர் வழிந்தால்'. 'நீங்கள் கேட்டவை' என்ற பக்கா கமர்ஷியல் படத்திற்கு பிறகு அதே பாணியில் பாலுமகேந்திரா இயக்கிய படம். ஆனால் படம் வெற்றி பெறவில்லை.
பாலுமகேந்திராவின் மற்ற படங்களை போல் இல்லாமல் காமெடி, ஆக்ஷன், சென்டிமென்ட், காதல் என அனைத்தும் கலந்த கமர்ஷியல் படமாக உருவானது. இந்த படத்தில் நேர்மையான போலீஸ் ஆபிசராக ரஜினிகாந்த் நடித்திருப்பார். உயர் அதிகாரியான செந்தாமரை செய்யும் ஒரு கொலையின் பழி ரஜினி மீது விழும், இதனால் அவர் சஸ்பெண்ட் செய்யப்படுவார். பிறகு ரஜினி உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து மீண்டும் பணியில் சேர்வதுதான் படத்தின் கதை.
படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மாதவி நடித்திருப்பார். நடிப்புடன் தனது அழகான கண்களால் ரசிகர்களின் மனதை கவர்ந்திருப்பார். வி.கே ராமசாமி, வெண்ணிற ஆடை மூர்த்தி, பூர்ணம் விஸ்வநாதன், ஒரு விரல் கிருஷ்ணா ராவ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
மவுனிகாவுக்கு இதுதான் அறிமுக படமாகும். இந்த படத்தில் நடித்தபோதுதான் பாலுமகேந்திராவை காதலித்து அவரது துணைவியார் ஆனார் மவுனிகா.




