ரஜினி, ஸ்ரீதேவி மாதிரி பிரதீப் ரங்கநாதன், மமிதா : டியூட் பட இயக்குனர் பேட்டி | அப்பா இறுதி ஊர்வலத்தில் அம்மா ஆடியது ஏன்? : ரோபோ சங்கர் மகள் பேட்டி | மீண்டும் பெரிய திரையில் ஐரா அகர்வால் | பிளாஷ்பேக் : உதவியாளருக்காக திரைக்கதை எழுதிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : ஜெயித்த பிச்சைக்காரி, தோற்ற பணக்காரி | யு டியூப்பில் வெளியிடப்பட்ட திருக்குறள் | லோகா ஒளிப்பதிவாளருக்கு விலை உயர்ந்த வாட்ச் பரிசளித்த கல்யாணி பிரியதர்ஷன் | நானி படத்தை இயக்கும் ஓஜி இயக்குனர் ; பூஜையுடன் படம் துவங்கியது | தீவிரமாக களரி பயிற்சி கற்று வரும் இஷா தல்வார் | தொடரும் பட இயக்குனரின் சினிமாட்டிக் யுனிவர்ஸில் ஹீரோவாக நடிக்கும் பிரித்விராஜ் |
1980களில் ஹீரோக்கள் 2 வேடங்களில் நடிப்பதை ஒரு சாதனையாக நினைத்துக் கொண்டிருந்தார்கள். இந்த காலகட்டத்தில் பெரும்பாலான ஹீரோக்கள் இரண்டு வேடங்களில் நடித்தார்கள். இந்த வரிசையில் அப்போது வேகமாக வளர்ந்து வந்த டி.ராஜேந்தரும் தன் பங்கிற்கு 2 வேடங்களில் நடித்த படம் 'உறவைக் காத்த கிளி'. இந்த படத்தில்தான் தன் மகன் சிம்புவையும் அவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தினார்.
டி.ராஜேந்தருடன் சரிதா, ஜீவிதா, புஷ்பலதா, எஸ்.எஸ்.சந்திரன், நளினி, சங்கிதா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். தஞ்சை சினி ஆர்ட்ஸ் சார்பில் அவரே தயாரித்தும் இருந்தார். இசையும் அவரே. படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட்டானாலும், அவரது முந்தைய படங்களை போன்று இந்த படம் பெரிய வெற்றி பெறவில்லை. காரணம் அவரது இரட்டை வேட நடிப்பை அவரது ரசிகர்கள் மட்டுமே ரசித்தார்கள். ஜீவிதா, ஜெயந்த் இளம் ஜோடிகளாக நடித்திருந்தார்கள்.
மதுவின் கேடு-ஐ மையப்படுத்தி உருவாகி இருந்த இந்தப் படத்தில் டி.ராஜேந்தர் குடிகாரராகவும், குடிக்கு எதிரானவராகவும் இரண்டு வேடங்களில் நடித்திருந்தார்.