என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

1980களில் ஹீரோக்கள் 2 வேடங்களில் நடிப்பதை ஒரு சாதனையாக நினைத்துக் கொண்டிருந்தார்கள். இந்த காலகட்டத்தில் பெரும்பாலான ஹீரோக்கள் இரண்டு வேடங்களில் நடித்தார்கள். இந்த வரிசையில் அப்போது வேகமாக வளர்ந்து வந்த டி.ராஜேந்தரும் தன் பங்கிற்கு 2 வேடங்களில் நடித்த படம் 'உறவைக் காத்த கிளி'. இந்த படத்தில்தான் தன் மகன் சிம்புவையும் அவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தினார்.
டி.ராஜேந்தருடன் சரிதா, ஜீவிதா, புஷ்பலதா, எஸ்.எஸ்.சந்திரன், நளினி, சங்கிதா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். தஞ்சை சினி ஆர்ட்ஸ் சார்பில் அவரே தயாரித்தும் இருந்தார். இசையும் அவரே. படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட்டானாலும், அவரது முந்தைய படங்களை போன்று இந்த படம் பெரிய வெற்றி பெறவில்லை. காரணம் அவரது இரட்டை வேட நடிப்பை அவரது ரசிகர்கள் மட்டுமே ரசித்தார்கள். ஜீவிதா, ஜெயந்த் இளம் ஜோடிகளாக நடித்திருந்தார்கள்.
மதுவின் கேடு-ஐ மையப்படுத்தி உருவாகி இருந்த இந்தப் படத்தில் டி.ராஜேந்தர் குடிகாரராகவும், குடிக்கு எதிரானவராகவும் இரண்டு வேடங்களில் நடித்திருந்தார்.