கன்னடத்தில் அடி எடுத்து வைத்த 'அனிமல்' பட நடிகர் உபேந்திரா | 'தி ராஜா சாப்' டீசரை விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய ஹைதராபாத் போக்குவரத்து போலீஸ் | அடுத்த தலைமுறைக்கு இதைத்தான் கொடுக்க போகிறோமா ? நடிகை மஞ்சிமா காட்டம் | மம்முட்டி நலமாக இருக்கிறார் ; ராஜ்யசபா எம்பி வெளியிட்ட தகவல் | அமீர்கான் படக்குழுவினரை நேரில் சந்தித்து உற்சாகப்படுத்திய ஷாருக்கான் | கவர்ச்சி ஆட்டத்தில் இறங்கிய காயத்ரி | டாம் குரூசுக்கு சிறப்பு ஆஸ்கர் விருது அறிவிப்பு | பிளாஷ்பேக்: டி.ராஜேந்தர் 2 வேடங்களில் நடித்த படம் | பிளாஷ்பேக்: புராண படங்களில் நடித்து புகழ்பெற்ற பாலசுப்பிரமணியம் | கிண்டல் செய்த ரசிகருக்கு மாளவிகா மோகனன் கொடுத்த பதிலடி |
தமிழ் சினிமாவின் ஆரம்ப காலகட்டங்களில் வலம் வந்த பல ஹீரோக்களே வரலாற்றில் பதிவாகாமல் போய்விட்டார்கள். அப்படி இருக்கும்போது குணசித்ர நடிகர்கள் மட்டும் எப்படி பதிவாகியிருப்பார்கள். அதையும் தாண்டி ஒரு சிலரைப் பற்றி தகவல்கள் இப்போது வரை சிறிதளவேணும் வந்திருக்கிறது. அப்படியானவர்களில் ஒருவர்தான் ஆர்.பாலசுப்பிரணியம்.
ஆஜானுபாகுவான உடல். கம்பீரமான பார்வை. தெளிவான வசன உச்சரிப்பு. வில்லன் கதாபாத்திரங்களிலேயே பெரும்பாலும் தோற்றமளித்தவர். என்றாலும் குணசித்ர கதாபாத்திரங்களையும் ஏற்று கொடுத்த வேடத்திற்கு பங்கம் விளைவிக்காமல் நடித்துப் பெயர் பெற்றவர். பி.யூ.சின்னப்பா, டி.ஆர்.மகாலிங்கம், எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட அன்றைய முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்தவர். 1938 முதல் 1971 வரை சுமார் 100 படங்கள் வரை நடித்திருக்கிறார்.
சினிமாவிற்கு வருவதற்கு முன்பு நாடகங்களில் சீதையாக நடித்து புகழ்பெற்ற இவர் சினிமாவிலும் சில படங்களில் பெண்ணாக நடித்துள்ளார். ஆனால் அது பற்றிய தகவல் எதுவும் இல்லை. பாலசுப்பிரமணியத்தின் நாடகத்தைப் பார்த்த ஸ்ரீராமுலு நாயுடு துக்காராம் (1938) படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகப்படுத்தினார். இறுதியாக 1964ம் ஆண்டு வெளிவந்த 'கர்ணன்' படத்தில் நடித்தார். பல வருட இடைவெளிக்கு பிறகு 1971ம் ஆண்டு வெளிவந்த 'ஆதிபராசக்தி' படத்திலும் நடித்தார்.
ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் உள்ள சுவாமி மலையில் பிறந்த இவர், கும்பகோணம் உயர்நிலை பள்ளியில் படித்து அங்கேயே ஆசிரியராக பணியாற்றினார். கும்பகோணத்தில் செயல்பட்ட 'வாணி விலாஸ்' நாடக கம்பெனி மூலம் தனது கலைப் பயணத்தை தொடங்கியவர்.