சான்வே மேக்னாவின் புதிய படம் | பிளாஷ்பேக்: இளையராஜாவின் ஆல்பம் இசையை பின்னணி இசையாக பயன்படுத்திய பாலுமகேந்திரா | பிளாஷ்பேக் : கடைசி வரை கஷ்டத்தில் வாழ்ந்த புஷ்பவல்லி | நிறைய சுமைகளை சுமக்காதீர்கள் : சமுத்திரகனி அட்வைஸ் | ‛நூறு சாமி' படக் கதை குறித்து பகிர்ந்த சசி | முத்து என்கிற காட்டானுக்கு பின்னால் நடந்ததையும் வெப் தொடராக எடுக்கலாம் : விஜய் சேதுபதி | ஓடிடியில் வரவேற்பைப் பெற்ற 'மேட் இன் கொரியா' | துரந்தர் : இரண்டு பாகங்களிலும் 1000 கோடி வசூலித்த முதல் இந்தியத் திரைப்படம் | பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு |

சுஜித் இயக்கத்தில் பவன் கல்யாண், பிரியங்கா மோகன் நடித்து வெளிவந்த 'ஓஜி' திரைப்படம் 300 கோடி வசூலித்து சாதனை புரிந்தது. அப்படம் வெளிவந்த பின் வெளியான சில படங்களுடன் ஒப்பிட்டுப் பேசினர்.
இதனிடையே, கன்னட இயக்குனரான சந்துரு சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றால் இப்போது புதிய சர்ச்சை எழுந்துள்ளது. அவர் இயக்கி, உபேந்திரா, சுதீப், சிவராஜ்குமார் மற்றும் பலர் நடிப்பில் 2023ல் 'கப்ஜா' என்ற கன்னடப் படம் வெளிவந்தது. அந்தப் படத்தின் சில காட்சிகளில் 'இன்ஸ்பயர்' ஆகி 'ஓஜி' படத்தை எடுத்துள்ளதாக சந்துரு கூறியிருந்தார்.
அது பவன் கல்யாண் ரசிகர்களிடம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பலரும் அவரை சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகிறார்கள். 'கப்ஜா' படம் சரியாக ஓடவில்லை என்றாலும் ஒரு அதிரடியான ஆக்ஷன் படமாக இருந்தது. அதன் இரண்டாம் பாகத்தையும் எடுக்கப் போவதாக ஏற்கெனவே அதன் இயக்குனரும் அறிவித்திருந்தார்.