வெங்கடேஷ் ஜோடியான கே.ஜி.எப் நாயகி! | பிப்ரவரி மாதத்தை குறிவைக்கும் இரண்டு வானம் படக்குழு | நவ., 7ல் ‛அதர்ஸ்' படம் ரிலீஸ் | ஓடிடியில் நேரடியாக வெளியான தீபாவளி படம் | பிளாஷ்பேக்: ஸ்ரீதேவி தான் வேண்டும் என்று அடம்பிடித்த ரஜினி | பிளாஷ்பேக் : 'மனோகரா' கதை ஷேக்ஸ்பியர் எழுதியது | ஒரே நேரத்தில் இரு லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படமா? | சூப்பர் மாரி சூப்பர் : ‛பைசன்' படத்திற்கு ரஜினி பாராட்டு | ‛பரிசு' : லட்சியத்திற்காக போராடும் பெண்ணின் கதை | ஒரு ‛என்' சேர்த்தால், வாழ்க்கை மாறிடுமா? : ஹன்சிகாவின் ஆசை |
சுஜித் இயக்கத்தில் பவன் கல்யாண், பிரியங்கா மோகன் நடித்து வெளிவந்த 'ஓஜி' திரைப்படம் 300 கோடி வசூலித்து சாதனை புரிந்தது. அப்படம் வெளிவந்த பின் வெளியான சில படங்களுடன் ஒப்பிட்டுப் பேசினர்.
இதனிடையே, கன்னட இயக்குனரான சந்துரு சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றால் இப்போது புதிய சர்ச்சை எழுந்துள்ளது. அவர் இயக்கி, உபேந்திரா, சுதீப், சிவராஜ்குமார் மற்றும் பலர் நடிப்பில் 2023ல் 'கப்ஜா' என்ற கன்னடப் படம் வெளிவந்தது. அந்தப் படத்தின் சில காட்சிகளில் 'இன்ஸ்பயர்' ஆகி 'ஓஜி' படத்தை எடுத்துள்ளதாக சந்துரு கூறியிருந்தார்.
அது பவன் கல்யாண் ரசிகர்களிடம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பலரும் அவரை சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகிறார்கள். 'கப்ஜா' படம் சரியாக ஓடவில்லை என்றாலும் ஒரு அதிரடியான ஆக்ஷன் படமாக இருந்தது. அதன் இரண்டாம் பாகத்தையும் எடுக்கப் போவதாக ஏற்கெனவே அதன் இயக்குனரும் அறிவித்திருந்தார்.