பாலா நடித்த காந்திகண்ணாடி படம்: ம.கா.பா ஆனந்த், பிரியங்கா சொன்னது என்ன? | 50 ஆண்டு கொத்தடிமை,, தஞ்சை பின்னணியில் நடக்கும் கதை | மதராஸியை நம்பியிருக்கும் முருகதாஸ் | நடிப்பில் ஆர்வம் காண்பிக்கும் மிஷ்கின் | குருநாதர் பாக்யராஜ் சொன்ன அட்வைஸ்: சிஷ்யன் பாண்டியராஜன் நெகிழ்ச்சி | பிளாஷ்பேக்: ஜேம்ஸ்பாண்ட் நடிகராக ஜெய்சங்கர் ஜெயித்துக் காட்டிய “வல்லவன் ஒருவன்” | நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பேரன் மனஸ் மானு சினிமாவுக்கு வருகிறார் | நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரன்ட் நாளை மூடப்படுகிறது! | சமந்தா வெளியிட்ட துபாய் பேஷன் ஷோ வீடியோவில் தெரிந்த ஆணின் கை! | வீர தீர சூரன்- 2 படத்திற்கு பிறகு மூன்று படங்களில் கமிட்டான விக்ரம்! |
ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடித்த 'இந்தியன்' படத்தின் முதல் பாகம் 1996ம் ஆண்டு வெளிவந்தது. 28 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த வாரம் வெளிவர உள்ளது. அப்போது இருந்த கதை மீண்டும் இரண்டாம் பாகத்தில் தொடரும் போது அது பொருத்தமாக இருக்குமா என்று சிலர் கேள்விகளை எழுப்பினார்கள்.
அதற்கு பதிலளிக்கும் விதமாக சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குனர் ஷங்கர், “சேனாபதி ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறார். சில விஷயங்களைப் பற்றி ஒவ்வொருவருக்கும் கோபம் இருக்கும், சில விஷயங்கள் மாற வேண்டும் என்றும் விருப்பம் இருக்கும். அதனால்தான் சேனாபதி கதாபாத்திரத்தை மீண்டும் கொண்டு வந்து 'இந்தியன் 2' கதையை எழுதினேன். இந்தியாவில் இன்றும் ஊழல் இருக்கிறது, அதைப் பற்றி தினமும் நாம் பத்திரிகைகளில் படிக்கிறோம். இந்த சோஷியல் மீடியா காலத்தில், அதற்குப் பொருத்தமாக இளைஞர்களுக்கு தொடர்பாகும் விதத்தில் கதை எழுத வேண்டிய தேவை இருந்தது. 'இந்தியன் 2' படத்தில் அது யதார்த்தமாக இருக்கும் அளவிற்கு எழுதியிருக்கிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.
இந்தியன் 2 படத்தில் யு டியூப், எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் கதையில் முக்கியத்துவம் பெற்றுள்ளன. அதைச் சுற்றித்தான் கதையும் வடிவமைக்கப்பட்டுள்ளது.