இலங்கை பார்லிமென்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மோகன்லால் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' தயாரிப்பாளருக்கு நீதிமன்றத்தில் ஆஜராக ஒரு வாரம் அவகாசம் நீட்டிப்பு | அப்படி செய்ய மாட்டேன் என பிடிவாதமாக நின்றார் நயன்தாரா ; பிரமிக்கும் யோகி பாபு | பஹத் பாசிலின் 'கராத்தே சந்திரன்' துவங்குவது எப்போது? | அஜித், சிவகார்த்திகேயன் படங்களில் மோகன்லால் | வெற்றி மட்டுமே பேசப்படும்: இது திரிஷா தத்துவம் | ரஜினி 50வது ஆண்டில் 2 படங்கள்: ஆயிரம் கோடியை அள்ளவும் பிளான் | 'குபேரா'வில் 'சமீரா' பற்றி ராஷ்மிகா மந்தனா நீளமான பதிவு | படத்தில் நடிக்கும் அனைவருக்கும் 'ஸ்கிரிப்ட்' கொடுக்க வேண்டும்: விக்ரம் பிரபு வேண்டுகோள் | நாயகியான செய்தி வாசிப்பாளர் |
தெலுங்குத் திரையுலகத்தில் அதிக வசூலைப் பிடித்த 3வது படமாக 'கல்கி 2898 ஏடி' படம் முன்னேறியுள்ளது. பிரபாஸ் நடித்து கடந்த ஆண்டு வெளிவந்த 'சலார்' படத்தின் வசூலைக் கடந்து இந்த சாதனையைப் படைத்துள்ளது.
பிரசாந்த் நீல் இயக்கத்தில், பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ் நடித்து கடந்த வருடம் வெளிவந்த 'சலார்' படம் 600 கோடிக்கும் சற்றே கூடுதலாக தொகையை மட்டுமே வசூலித்தது. எதிர்பார்த்ததை விடவும் அந்தப் படத்திற்கு வசூல் குறைவுதான். 'கேஜிஎப்' இயக்குனர் இயக்கிய படம் என்பதால் 1000 கோடியைக் கடக்கும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், படம் அனைத்து ரசிகர்களையும் திருப்திப்படுத்தவில்லை.
அதேசமயம் கடந்த வாரம் பிரபாஸ் நடித்து வெளிவந்த 'கல்கி 2898 ஏடி' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்போது ரூ.700 கோடி வசூலைக் கடந்துவிட்டதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
படம் தற்போது 'பிரேக் ஈவன்' ஆகிவிட்டது. இனி வசூலாகும் தொகை லாபக் கணக்கில் சேரும். தயாரிப்பாளரைப் பொறுத்தவரையில் அவருக்கு லாபம்தான். படத்தின் ஓடிடி, சாட்டிலைட் உரிமையே 100 கோடிக்கும் அதிகமாக விற்பனையாகி உள்ளது.
'பாகுபலி 2' படத்திற்குப் பிறகு பிரபாஸ் நடித்து வெளிவந்த படங்கள்(சலார் தவிர்த்து) அனைத்துமே வசூல் ரீதியாகத் தோல்வியடைந்த நிலையில் இந்தப் படம் அவரையும் சேர்த்து காப்பாற்றியுள்ளது.