இந்த 3 விஷயங்களும் முக்கியமானவை : தீபிகா படுகோனே | உருவக்கேலி விவகாரம் : கயாடு லோஹர் கொடுத்த விளக்கம் | அடி வாங்க தயாரா : குஷ்பு கோபம் | தனுஷின் தேரே இஷ்க் மெயின் டிரைலர் வெளியீடு : வரவேற்பு எப்படி | காந்தா படத்தின் முதல் நாள் வசூல் விவரம் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி படத்திலிருந்து சுந்தர் சி விலகல் ஏன் : கமல் சொன்ன பதில் | ஜப்பானில் வெளியாகும் மலைக்கோட்டை வாலிபன் : ரிலீஸ் தேதி அறிவிப்பு | தேசிய விருதுக்கு படம் அனுப்புவதில் ஏற்பட்ட சிக்கல் : நீதிமன்றத்தை நாடிய பஹத் பாசில் படக்குழு | மம்முட்டிக்கு பிரித்விராஜ் சிபாரிசு, விநாயகனுக்கு மம்முட்டி சிபாரிசு : களம்காவல் சுவாரசியம் | சித்தார்த், ராஷி கண்ணா இணையயும் 'ரெளடி அண்ட் கோ' |

கமல் தயாரிக்க ரஜினி நடிக்கும் படத்தில் இருந்து விலகிவிட்டார் இயக்குனர் சுந்தர்.சி. அவர் ஏன் விலகினார். என்ன பிரச்னை என பலருக்கும் தெரியவில்லை. ஆளுக்கு ஒரு காரணம் சொல்கிறார்கள். சம்பளம், பணப்பிரச்னை என்று ஒரு தரப்பும், கதை பிரச்னை என இன்னொரு தரப்பும் சொல்கிறது.
இது குறித்து கமலின் ராஜ்கமல் தரப்பு, படத்தில் இருந்து இயக்குனர் விலகிவிட்டார். ஆனால் கமல் தயாரிப்பில் ரஜினி நடிப்பது உறுதி. படம் டிராப் ஆகவில்லை என்கிறார்கள். இதற்கிடையில் அந்த படத்தை இயக்குபவர்கள் பட்டியலில் வெங்கட்பிரபு, கார்த்திக் சுப்புராஜ், சில மலையாள, தெலுங்கு பட இயக்குனர் பெயர் அடிபடுகிறது.
ரஜினி, கமல் பொறுமையாக முடிவெடுப்போம். இனி தவறு நடக்க கூடாது என நினைக்கிறார்களாம். மீண்டும் இந்த படத்தை இயக்க லோலேஷ் கனகராஜ் வருவாரா? ஜெயிலர் 2வுக்கு பின் நெல்சன் இயக்குவாரா? சுந்தர்.சி மனம் மாறி வருவாரா என்ற கேள்விகளுக்கும் பதில் இல்லை.