Advertisement

சிறப்புச்செய்திகள்

பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இனி அப்படி சொல்லாதீங்க : கமல்ஹாசன் வேண்டுகோள்

21 மார், 2026 - 01:51 IST
எழுத்தின் அளவு:
Dont-say-that-again-Kamal-Haasans-request
Advertisement

நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் கமல்ஹாசன் இன்று ஊடக நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், ‛‛பல ஆண்டு விவாதங்களுக்குப் பின் சென்சார் என்ற சொல்லை நீக்கச் சொல்லி இந்தியாவின் மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியமாக மாற்றி இருக்கிறோம். அந்த அமைப்பின் பெயர் சென்ட்ரல் போர்டு ஆப் பிலிம் சர்ட்டிபிகேசன் தான். சினிமாவில் தணிக்கை என்பது தவறு என்று வழக்காடி வழக்கொழிந்த சொல்.

தமிழ் ஊடகங்களும் தணிக்கை என்ற சொல்லை தவிர்க்க வேண்டும். திரை உலகு வாதாடி மத்திய அரசை நீக்க வைத்தபின் அச்சொல்லை பயன்படுத்த வேண்டாம். கலையை தணிக்கை செய்ய ஒரு ஜனநாயக அரசுக்கு உரிமை இருக்கக் கூடாது என்பதே உலக சினிமா ஒப்புக்கொண்ட நியாயம். தமிழ் சினிமாவும்தான் என கமல் கூறியுள்ளார்.

இப்போது மீடியாக்களில், பேச்சு வழக்கில் சினிமா சென்சார், சென்சார் போர்டு என்பது அதிகம் பயன்படுத்தப்படுவதாலும், அது தவறானது. சினிமாவை தணிக்கை செய்வது அந்த அமைப்பு இல்லை. அது சான்றிதழ் வழங்கும் அமைப்பு என்று கமல்ஹாசன் தெளிவுபடுத்தி உள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
2 ஆயிரம் கோடி வசூலிக்குமா துரந்தர் 2 : மாதவன் செம ஹேப்பி2 ஆயிரம் கோடி வசூலிக்குமா துரந்தர் 2 : ... 25 ஆண்டுகளாக ஏன் நடிக்கலை : ‛பூவே உனக்காக' சங்கீதா 25 ஆண்டுகளாக ஏன் நடிக்கலை : ‛பூவே ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

V RAMASWAMY - Bengaluru,இந்தியா
22 மார், 2026 - 09:03 Report Abuse
V RAMASWAMY கலை என்கிற போர்வையில் கலையை கொலை செய்தால், தணிக்கை அவசியம் தான். கொலை, கற்பழிப்பு, ஊழல், திருட்டு, வில்லத்தனம் இவற்றை மிகைப்படுத்தி நியாயப்படுத்தி ஊக்குவித்து சமூக சீர்கேட்டிற்கு உதவுவது ஒரு கலையா? திரைப்படங்கள் சமூக பொறுப்புணர்ச்சி இல்லாமல் தயாரிக்கப்படும் நிலையில் தணிக்கை அவசியம் தேவை, அந்த சொல்லும் தணிக்கை. காவல் துறை, டோல் கேட், செக் போஸ்ட் இவை போன்று சினிமாவுக்கும் தணிக்கை அவசியம்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap