பிளாஷ்பேக்: பி யு சின்னப்பா திரைப்படத்தில் பிரியமுடன் எம் ஜி ஆருக்கு வாய்ப்பளித்த இயக்குநர் கிருஷ்ணன் | ஏப்ரல் 10 கருப்பு ரிலீசா... : ஆர்.ஜே பாலாஜி தந்த அப்டேட் | மீண்டும் ஆஸ்கர் மேடையில் பிரியங்கா சோப்ரா | விடியலாக முழு வீடியோ வரும் : திரிஷாவுக்கு வாழ்த்துகள் கூறி பார்த்திபன் சஸ்பென்ஸ் | என் மீது திட்டமிட்டு தாக்குதல் : பிரியங்கா மோகன் | சம்பளத்தை குறைக்காத அஜித்: இன்னமும் சிக்காத தயாரிப்பாளர்கள் | மீடியாவை சந்தித்து பேசுகிறார் சங்கீதா? | 10 நாளில் 50 கோடி வசூலித்த ‛தாய் கிழவி' | சன்னி தியோலின் லாகூர் 1947 பட டைட்டில் மாற்றம் ? | தலைவா படத்தில் பிரச்னைக்குரிய வார்த்தைகளை சேர்த்தது யார்? : சஸ்பென்ஸ் உடைத்த இயக்குனர் விஜய் |

நயன்தாரா நடித்த 'அறம்' படத்தை இயக்கிய கோபி நயினார், தற்போது இயக்கி உள்ள படம் 'மனுஷி'. இந்த படத்தை வெற்றிமாறன் தயாரித்துள்ளார். ஆண்ட்ரியா நடித்துள்ளார். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படும் ஒரு பெண், போலீஸ் நிலையத்தில் அனுபவிக்கும் கொடுமைதான் படத்தின் கதை. இந்த படத்தை பார்த்த தணிக்கை குழுவினர், இந்த படம் அரசின் செயல்பாடுகளை மோசமாக விமர்சிக்கிறது. காவல்துறையின் நன்மதிப்பை குறைக்கிறது என்று தணிக்கை சான்றிதழ் தர மறுத்து விட்டது.
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தயாரிப்பாளர் வெற்றிமாறன் வழக்கு தொடர்ந்தார். அதில், அவர் தாக்கல் செய்த மனுவில் 'நிபுணர் குழு அமைத்து இந்த படத்தை மீண்டும் மறுஆய்வு செய்து தணிக்கை சான்று வழங்க உத்தரவிட வேண்டும்' என்று கூறியிருந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தணிக்கை வாரியம் தரப்பில், “மனுஷி திரைப்படத்தை மீண்டும் பார்வையிட்டு மறுஆய்வு செய்ய இருப்பதாகவும், அதில் உள்ள ஆட்சேபகரமான காட்சிகள், வசனங்களை நீக்கும்படி மனுதாரருக்கு தெரிவிக்கப்படும். அதையேற்று மனுதாரர், அந்த காட்சிகளை நீக்கினால் அதன்பிறகு எந்த சான்று வழங்குவது என்ற முடிவை மறுஆய்வுக்குழு எடுக்கும். ஒருவேளை அந்த காட்சிகளை நீக்க மறுத்தால் அதுதொடர்பாக உரிய அறிக்கை தாக்கல் செய்யப்படும்'' என்று கூறப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணையை வருகிற 17ம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.