Advertisement

சிறப்புச்செய்திகள்

மம்முட்டி வில்லனாக நடிக்கும் ‛கலம்காவல்' | ஹரிஷ் கல்யாணுக்காக பாடியுள்ள சிம்பு! | வெப் தொடருக்காக ஒன்றிணையும் மாதவன், துல்கர் சல்மான், கவுதம் கார்த்திக்! | தனுஷின் அடுத்த ஹிந்தி படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ஜனநாயகன் பட தயாரிப்பாளர் உடன் கைகோர்க்கும் போர் தொழில் பட இயக்குனர்! | ஆறு மாதத்திற்கு முன்பே சம்பளம் தந்த கமலுக்கு நன்றி சொன்ன சிவகார்த்திகேயன் | ரூ. 25 கோடி வசூலைக் எட்டிய குடும்பஸ்தன் படம்! | தனுஷ், தமிழரசன் பச்சமுத்து படத்திற்கு இசையமைக்கும் அனிருத்! | ‛‛எந்த விபத்தும் ஏற்படவில்லை, நலமுடன் இருக்கிறேன்'' - நடிகர் யோகி பாபு விளக்கம் | சினேகனின் குழந்தைகளுக்கு பெயர்சூட்டிய கமல்ஹாசன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மைசூரு பண்ணை வீட்டில் தங்க நடிகர் தர்ஷனுக்கு உயர் நீதிமன்றம் அனுமதி

23 டிச, 2024 - 12:58 IST
எழுத்தின் அளவு:
HighCourt-grants-Darshan-15-days-permission-to-stay-in-Mysuru-Farmhouse


கன்னட திரையுலகில் குறிப்பிடத்தக்க முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் தர்ஷன். கடந்த ஜூன் மாதம் தனது காதலியும் நடிகையுமான பவித்ரா கவுடாவுக்கு தனது ரசிகரான ரேணுகா சுவாமி என்பவர் அடிக்கடி ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பி டார்ச்சர் செய்தார் என்கிற கோபத்தில் அவரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கிட்டத்தட்ட மூன்று மாத சிறைவாசத்தில் அவர் பலமுறை ஜாமின் விண்ணப்பித்தும் அது நிராகரிக்கப்பட்டது. பின்னர் தனது உடல் நிலையை காரணம் காட்டி முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவரின் பரிந்துரையை மேற்கோள் காட்டி ஆறு வார இடைக்கால ஜாமின் பெற்றார் தர்ஷன்.

அதற்குள் ஒரு வழியாக தர்ஷன் மட்டுமல்லாது இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவருக்குமே கடந்த சில தினங்களுக்கு முன்பு கர்நாடக உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. இந்த நிலையில் தற்போது மைசூருக்கு அருகில் 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனது பண்ணை வீட்டிற்கு சென்று தங்கியுள்ளார் தர்ஷன். இவருக்கு ஜாமின் வழங்கப்படும் போது நீதிமன்றத்தில் தனக்கு மைசூருக்கு அருகில் உள்ள பண்ணை வீட்டில் சென்று தங்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கையும் வைத்து இருந்தார் தர்ஷன். அதற்கு நீதிமன்றமும் அனுமதி அளித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து தற்போது பண்ணை வீட்டில் தங்கியுள்ள தர்ஷனை அவரது அம்மா உள்ளிட்ட நெருங்கிய குடும்ப உறவுகளும் நெருங்கிய சில நண்பர்கள் மட்டுமே சென்று சந்தித்து உள்ளனர். அவரது பண்ணை வீட்டில் உள்ளே என்ன நடக்கிறது என்று தெரியாத வண்ணம் முன்புறம் உள்ள கேட் முற்றிலும் மறைக்கப்பட்டு உள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'பரோஸ்' படத்திற்காக ஓவியப்போட்டி: குழந்தைகளுக்கு பரிசளித்த மோகன்லால்'பரோஸ்' படத்திற்காக ஓவியப்போட்டி: ... டிக்கெட் கட்டண உயர்வு ரத்து: தியேட்டர்கள் சங்கம் வரவேற்பு டிக்கெட் கட்டண உயர்வு ரத்து: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in