ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

1930களில் பெரிய தயாரிப்பாளராக இருந்தவர் லேனா செட்டியார் என்று அழைக்கப்படும் எஸ்.எம்.லட்சுமணன் செட்டியார். உயர் ரக கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார். சொந்தமாக பிரிண்டிங் பிரஸ் வைத்திருந்தார். அன்றைக்கு கோடீஸ்வரர்கள் மட்டுமே இருக்கும் கிளப்புகளில் மெம்பராக இருந்தார்.
தியாகராஜ பாகவதர் நடித்த 'பவளக்கொடி' படத்தின் மூலம் தயாரிப்பாளரான இவர் , அதன் பிறகு எம்.ஜி.ஆர் நடித்த 'மதுரை வீரன்', 'ராஜா தேசிங்கு', சிவாஜி நடித்த 'காவேரி', பி.யு.சின்னப்பா நடித்த 'கிருஷ்ண பக்தை' உள்ளிட்ட பல படங்களை தயாரித்தார். பெரும்பாலானவை வெற்றிப் படங்கள்.
ஆனால் எந்த படத்திலும் அவர் தயாரிப்பாளர் என்று தனது பெயரை போட்டுக் கொள்ளவில்லை. 'கிருஷ்ணா பிக்சர்ஸ் வழங்கும்' என்று அவரது கம்பெனி பெயர் மட்டுமே டைட்டில் கார்ட், விளம்பரம், பாட்டு புத்தகம் அனைத்த்திலும் போடப்பட்டிருக்கும்.