நூறுசாமி படப்பிடிப்பு நிறைவு : மே 1ல் ரிலீஸ் | என்னாலேயே என்னை புரிந்து கொள்ள முடியவில்லை : தமன்னா | கல்யாணியைப் போல அமலாபாலுக்கும் கை கொடுக்குமா டிராகுலா ஜானர் படம்? | ரங்தே பசந்தி 20ம் வருட நிறைவு : படக்குழுவினருடன் சேர்ந்து கொண்டாடிய அமீர்கான் | கார் விபத்தில் இளைஞர்கள் காயம் : நிற்காமல் சென்ற மலையாள நடிகர் கைதாகி ஜாமீனில் விடுதலை | ஜப்பானில் ரிலீஸாகும் ‛குபேரா' | அனிமேஷனில் தயாராகும் ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் | ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள லக்கி பட டிரைலர் வெளியானது | கலைத்துறை வித்தகர் விருது : எம்.என் ராஜம் அரசுக்கு கோரிக்கை | சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு: விசாரணைக்கு ஆஜராக ஜெயராமுக்கு சம்மன் |

1930களில் பெரிய தயாரிப்பாளராக இருந்தவர் லேனா செட்டியார் என்று அழைக்கப்படும் எஸ்.எம்.லட்சுமணன் செட்டியார். உயர் ரக கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார். சொந்தமாக பிரிண்டிங் பிரஸ் வைத்திருந்தார். அன்றைக்கு கோடீஸ்வரர்கள் மட்டுமே இருக்கும் கிளப்புகளில் மெம்பராக இருந்தார்.
தியாகராஜ பாகவதர் நடித்த 'பவளக்கொடி' படத்தின் மூலம் தயாரிப்பாளரான இவர் , அதன் பிறகு எம்.ஜி.ஆர் நடித்த 'மதுரை வீரன்', 'ராஜா தேசிங்கு', சிவாஜி நடித்த 'காவேரி', பி.யு.சின்னப்பா நடித்த 'கிருஷ்ண பக்தை' உள்ளிட்ட பல படங்களை தயாரித்தார். பெரும்பாலானவை வெற்றிப் படங்கள்.
ஆனால் எந்த படத்திலும் அவர் தயாரிப்பாளர் என்று தனது பெயரை போட்டுக் கொள்ளவில்லை. 'கிருஷ்ணா பிக்சர்ஸ் வழங்கும்' என்று அவரது கம்பெனி பெயர் மட்டுமே டைட்டில் கார்ட், விளம்பரம், பாட்டு புத்தகம் அனைத்த்திலும் போடப்பட்டிருக்கும்.




