நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

பாலிவுட்டில் அடுத்ததாக மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக 'வார்-2' உருவாகி உள்ளது. பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் கதாநாயகனாக நடிக்க இன்னொரு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடிகர் ஜூனியர் என்டிஆர் நடித்துள்ளார். ஹிந்தியில் இவருக்கு இதுதான் முதல் படம். கதாநாயகியாக கியாரா அத்வானி நடித்துள்ளார். அயன் முகர்ஜி இயக்கியுள்ளார். வரும் ஆகஸ்ட் 14ம் தேதி கூலி திரைப்படம் வெளியாகும் அதே நாளில் தான் இந்த படம் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தில் யார் யாருக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்பட்டது என்று சமீபத்தில் ஒரு பேட்டியல் சோசியல் மீடியாவில் வெளியானது.
அதில் கதாநாயகன் ஹிருத்திக் ரோஷனுக்கு 48 கோடி சம்பளம் என்றும் அதேசமயம் அதில் வில்லனாக நடித்துள்ள ஜூனியர் என்டிஆருக்கு 60 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கதாநாயகி கியாரா அத்வானிக்கு 15 கோடியும், இயக்குனர் அயன் முகர்ஜிக்கு 32 கோடியும் சம்பளமாக கொடுக்கப்பட்டு கிட்டத்தட்ட 250 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இப்படி பாலிவுட்டில் முன்னணியில் இருக்கும் ஒரு கதாநாயகனை விட முதன்முறையாக பாலிவுட்டில் அடி எடுத்து வைத்துள்ள ஜூனியர் என்டிஆருக்கு அதிக சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது பாலிவுட் திரையுலகையும் அங்குள்ள ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.