'வாரண்ட்' தொடரில் போலீசாரின் வலி மிகுந்த வாழ்க்கை : இயக்குநனர் தகவல் | பெண் ஓவியரின் பயோபிக்கில் நடிக்கும் அஞ்சலி சிவராமன் | 3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வரும் அபர்ணா | ஹாலிவுட் நடிகர் டொனால்ட் கிப் காலமானார் | பிளாஷ்பேக் : ஜெயலலிதா நடிக்க முடியாமல் போன நாடக கதை | பிளாஷ்பேக் : ஜெமினி சிறுவர்கள் யார் தெரியுமா? | சிங்கிள் தியேட்டர்கள் ஸ்டிரைக் : தெலுங்கானா தியேட்டர் சங்கம் முடிவு ? | தமிழ்ப் படம் இயக்கும் ஹிந்தி இயக்குனர் பால்கி | கருப்பு இன்று வெளியானது : எங்களுடன் துணை நின்றதுக்கு சூர்யா நன்றி | எங்கிருந்து வந்தேனோ அங்கேயே தான் இருக்கிறேன் : இளையராஜா பேட்டி |

கமல்ஹாசன் தயாரிப்பில், ரஜினிகாந்த் நடிக்கும் படத்தில் இருந்து சுந்தர்.சி விலகிவிட்டார். இந்த விலகலுக்கு பணப்பிரச்னைதான் காரணம் எனக் கூறப்பட்டது. சுந்தர்.சியின் சம்பளத்தை கமல் தரப்பு ஏற்கவில்லை. பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் சுந்தர்.சி தயாரிக்க நினைத்தார், அதற்கு ராஜ்கமல் நிறுவனம் சம்மதிக்கவில்லை என கூறப்பட்டது. ஆனால், சுந்தர்.சி விலகலுக்கு பணப்பிரச்னை அல்ல, கதை செட்டாகவில்லை. என் ஹீரோ ரஜினிக்கு கதை பிடிக்க வேண்டும் என்று ஓபனாக சொல்லிவிட்டார் கமல். இதனால் சுந்தர்.சி சொன்ன கதைகள் ரஜினிக்கு பிடிக்கவில்லை என்பது தெளிவாகிறது.
இவ்வளவு வெற்றி படங்கள் கொடுத்த சுந்தர்.சி கதை விஷயத்தில் சொதப்புவாரா? அப்படியே சில கதைகள் ரஜினிக்கு பிடிக்காவிட்டாலும், வேறு கதைகளை அவர் தயார் செய்ய மாட்டாரா? சுந்தர்.சி விலகலுக்கு கதை பிரச்னை காரணமா? வேறு பிரச்னையா? இது குறித்து சுந்தர். சி விரைவில் விளக்கம் அளிக்க வேண்டும் என பலர் எதிர்பார்க்கிறார்கள்.
இதற்கிடையே, 'மகாராஜா' படத்தை இயக்கிய நித்திலன் லேட்டஸ்ட்டாக ரஜினியை சந்தித்து கதை சொல்லியிருக்கிறார். இன்னும் சில இயக்குனர்களும் கதையுடன் ரஜினியை அணுகி இருக்கிறார்களாம். வரும் டிசம்பர் மாதம் 12ம் தேதி, ரஜினியின் 75வது பிறந்தநாளுக்குள் கதை முடிவாகி, அவர் பிறந்தநாளில் அந்த பட அறிவிப்பு வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.