நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

கமல்ஹாசன் தயாரிப்பில், ரஜினிகாந்த் நடிக்கும் படத்தில் இருந்து சுந்தர்.சி விலகிவிட்டார். இந்த விலகலுக்கு பணப்பிரச்னைதான் காரணம் எனக் கூறப்பட்டது. சுந்தர்.சியின் சம்பளத்தை கமல் தரப்பு ஏற்கவில்லை. பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் சுந்தர்.சி தயாரிக்க நினைத்தார், அதற்கு ராஜ்கமல் நிறுவனம் சம்மதிக்கவில்லை என கூறப்பட்டது. ஆனால், சுந்தர்.சி விலகலுக்கு பணப்பிரச்னை அல்ல, கதை செட்டாகவில்லை. என் ஹீரோ ரஜினிக்கு கதை பிடிக்க வேண்டும் என்று ஓபனாக சொல்லிவிட்டார் கமல். இதனால் சுந்தர்.சி சொன்ன கதைகள் ரஜினிக்கு பிடிக்கவில்லை என்பது தெளிவாகிறது.
இவ்வளவு வெற்றி படங்கள் கொடுத்த சுந்தர்.சி கதை விஷயத்தில் சொதப்புவாரா? அப்படியே சில கதைகள் ரஜினிக்கு பிடிக்காவிட்டாலும், வேறு கதைகளை அவர் தயார் செய்ய மாட்டாரா? சுந்தர்.சி விலகலுக்கு கதை பிரச்னை காரணமா? வேறு பிரச்னையா? இது குறித்து சுந்தர். சி விரைவில் விளக்கம் அளிக்க வேண்டும் என பலர் எதிர்பார்க்கிறார்கள்.
இதற்கிடையே, 'மகாராஜா' படத்தை இயக்கிய நித்திலன் லேட்டஸ்ட்டாக ரஜினியை சந்தித்து கதை சொல்லியிருக்கிறார். இன்னும் சில இயக்குனர்களும் கதையுடன் ரஜினியை அணுகி இருக்கிறார்களாம். வரும் டிசம்பர் மாதம் 12ம் தேதி, ரஜினியின் 75வது பிறந்தநாளுக்குள் கதை முடிவாகி, அவர் பிறந்தநாளில் அந்த பட அறிவிப்பு வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.