மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ்பாபு, பிரித்விராஜ், பிரியங்கா சோப்ரா நடிக்கும் 'வாரணாசி' படத்தலைப்பு அறிவிப்பு விழா, ஐதராபாத்தில் நேற்றுமுன்தினம் நடந்தது. 100 அடி பிரமாண்ட டிஜிட்டல் ஸ்கிரீனில் படத்தலைப்பை வீடியோவாக வெளியிட்டார் ராஜமவுலி. சில தொழில்நுட்ப பிரச்னைகள் காரணமாக, முதல் 2 முறை அந்த வீடியோ பாதியில் நிறுத்தப்பட்டது. 3வது முறைதான் வெற்றிகரமாக ஒளிபரப்பானது.
அப்போது பேசிய ராஜமவுலி, 'எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. என் அப்பாவுக்கு அதிகம் உண்டு. அவர் ஆஞ்சநேயரை வணங்குவார். என் மனைவிக்கும் கடவுள் நம்பிக்கை உண்டு. அவர்கள் இந்த பிரச்னையை சரி செய்யலாமே' என்று பேசினார். இது சர்ச்சை ஆகி உள்ளது. ராமாயணத்தின் ஒரு பகுதியை வாரணாசி படமாக எடுக்கும் ராஜமவுலி மேடையில் கடவுள் நம்பிக்கை இல்லை என்று பேசலாமா? அவரின் முந்தைய படங்களில் கடவுள் நம்பிக்கை காட்சிகள், கடவுள் சம்பந்தப்பட்ட காட்சிகள் உணர்ச்சி பூர்வமாக இருந்தது. அப்படியானால் அவர் சினிமாவுக்காக, பணத்துக்காக இப்படிப்பட்ட காட்சிகளை வைத்தாரா? கடவுள் நம்பிக்கை இல்லாத ஒருவரால் இப்படிப்பட்ட காட்சிகளை ரசித்து உருவாக்க முடியுமா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதற்கு விரைவில் ராஜமவுலி பதில் சொல்வாரா என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேமேடையில் ஹீரோ மகேஷ்பாபுவை ராமர் வேடத்தில் பார்த்தபோது மெய் சிலர்த்தது என்றும் ராஜமவுலி பேசியிருந்தார்.