நிவேதா பெத்துராஜ் திருமணம் ரத்தா...? | மாப்பிள்ளை அவர்தான் ஆனால்.. என்கிற பாணியில் நடிகை வழக்கில் கருத்து தெரிவிக்கும் மலையாள நட்சத்திரங்கள் | பெப்காவில் திலீப்பை சேர்க்க முயற்சி ; ராஜினாமா செய்த பெண் டப்பிங் கலைஞர் | தக்க சமயத்தில் உதவி செய்வதில் சூர்யா எம்ஜிஆர் மாதிரி : விநியோகஸ்தர் சக்திவேலன் | அமெரிக்காவில் சிவகார்த்திகேயன், வெங்கட்பிரபு | பிக்பாஸ் ஜூலிக்கு டும் டும் : நிச்சயதார்த்தம் நடந்தது | பெங்களூருவிலும் மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறக்கும் மகேஷ் பாபு | படப்பிடிப்பு தொடங்கும் முன் ஓடிய ஹீரோயின் : டக்கென கமிட்டான மெகாலி | படையப்பா ரீ ரிலீஸ் : ரம்யா கிருஷ்ணன் மகிழ்ச்சி | உண்மை கதையில் விக்ரம் பிரபு |

இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ்பாபு, பிரித்விராஜ், பிரியங்கா சோப்ரா நடிக்கும் 'வாரணாசி' படத்தலைப்பு அறிவிப்பு விழா, ஐதராபாத்தில் நேற்றுமுன்தினம் நடந்தது. 100 அடி பிரமாண்ட டிஜிட்டல் ஸ்கிரீனில் படத்தலைப்பை வீடியோவாக வெளியிட்டார் ராஜமவுலி. சில தொழில்நுட்ப பிரச்னைகள் காரணமாக, முதல் 2 முறை அந்த வீடியோ பாதியில் நிறுத்தப்பட்டது. 3வது முறைதான் வெற்றிகரமாக ஒளிபரப்பானது.
அப்போது பேசிய ராஜமவுலி, 'எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. என் அப்பாவுக்கு அதிகம் உண்டு. அவர் ஆஞ்சநேயரை வணங்குவார். என் மனைவிக்கும் கடவுள் நம்பிக்கை உண்டு. அவர்கள் இந்த பிரச்னையை சரி செய்யலாமே' என்று பேசினார். இது சர்ச்சை ஆகி உள்ளது. ராமாயணத்தின் ஒரு பகுதியை வாரணாசி படமாக எடுக்கும் ராஜமவுலி மேடையில் கடவுள் நம்பிக்கை இல்லை என்று பேசலாமா? அவரின் முந்தைய படங்களில் கடவுள் நம்பிக்கை காட்சிகள், கடவுள் சம்பந்தப்பட்ட காட்சிகள் உணர்ச்சி பூர்வமாக இருந்தது. அப்படியானால் அவர் சினிமாவுக்காக, பணத்துக்காக இப்படிப்பட்ட காட்சிகளை வைத்தாரா? கடவுள் நம்பிக்கை இல்லாத ஒருவரால் இப்படிப்பட்ட காட்சிகளை ரசித்து உருவாக்க முடியுமா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதற்கு விரைவில் ராஜமவுலி பதில் சொல்வாரா என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேமேடையில் ஹீரோ மகேஷ்பாபுவை ராமர் வேடத்தில் பார்த்தபோது மெய் சிலர்த்தது என்றும் ராஜமவுலி பேசியிருந்தார்.