பராசக்தி படத்தை வெளியிட தடையில்லை : நீதிமன்றம் உத்தரவு | பத்து நாள் ராஜாவாக சதீஷ் | சிறிய படங்களின் பிரச்னைகள் தீருமா? | ஜனநாயகன் டிரைலர் நாளை(ஜன., 3) வெளியீடு | புத்தாண்டை முன்னிட்டு எத்தனை படங்களின் அப்டேட் வந்தது தெரியுமா ? | தியேட்டர்களை எதிர்த்து ஓடிடியில் வெளியான 'சல்லியர்கள்' | தெலுங்குக்கு முன்னுரிமை தரும் நயன்தாரா | 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! |

இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ்பாபு, பிரித்விராஜ், பிரியங்கா சோப்ரா நடிக்கும் 'வாரணாசி' படத்தலைப்பு அறிவிப்பு விழா, ஐதராபாத்தில் நேற்றுமுன்தினம் நடந்தது. 100 அடி பிரமாண்ட டிஜிட்டல் ஸ்கிரீனில் படத்தலைப்பை வீடியோவாக வெளியிட்டார் ராஜமவுலி. சில தொழில்நுட்ப பிரச்னைகள் காரணமாக, முதல் 2 முறை அந்த வீடியோ பாதியில் நிறுத்தப்பட்டது. 3வது முறைதான் வெற்றிகரமாக ஒளிபரப்பானது.
அப்போது பேசிய ராஜமவுலி, 'எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. என் அப்பாவுக்கு அதிகம் உண்டு. அவர் ஆஞ்சநேயரை வணங்குவார். என் மனைவிக்கும் கடவுள் நம்பிக்கை உண்டு. அவர்கள் இந்த பிரச்னையை சரி செய்யலாமே' என்று பேசினார். இது சர்ச்சை ஆகி உள்ளது. ராமாயணத்தின் ஒரு பகுதியை வாரணாசி படமாக எடுக்கும் ராஜமவுலி மேடையில் கடவுள் நம்பிக்கை இல்லை என்று பேசலாமா? அவரின் முந்தைய படங்களில் கடவுள் நம்பிக்கை காட்சிகள், கடவுள் சம்பந்தப்பட்ட காட்சிகள் உணர்ச்சி பூர்வமாக இருந்தது. அப்படியானால் அவர் சினிமாவுக்காக, பணத்துக்காக இப்படிப்பட்ட காட்சிகளை வைத்தாரா? கடவுள் நம்பிக்கை இல்லாத ஒருவரால் இப்படிப்பட்ட காட்சிகளை ரசித்து உருவாக்க முடியுமா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதற்கு விரைவில் ராஜமவுலி பதில் சொல்வாரா என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேமேடையில் ஹீரோ மகேஷ்பாபுவை ராமர் வேடத்தில் பார்த்தபோது மெய் சிலர்த்தது என்றும் ராஜமவுலி பேசியிருந்தார்.