சிரஞ்சீவியை சந்தித்து வாழ்த்து பெற்ற 'குபேரா' இயக்குனர் சேகர் கம்முலா | ‛96' இரண்டாம் பாகத்தில் பிரதீப் ரங்கநாதனா : பிரேம் குமார் மறுப்பு | ‛லப்பர் பந்து' ரீமேக்கில் ஷாருக்கானா : சுவாசிகா பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் | தனுஷ் உடன் மோதும் அதர்வா? | சிம்பு எடுத்த முடிவு | ரவி மோகன் இயக்கத்தில் நடிப்பது எப்போது : யோகி பாபு பதில் | 100வது நாளில் 'டிராகன்' | நித்திலன் சுவாமிநாதனை அழைத்து பாராட்டிய ஹாலிவுட் பிரபலம் | ஹாலிவுட் படத்தில் நடிக்கும் திஷா பதானி | பிரதமர் அணிவித்த சால்வை : இளம் பாடகி ஸ்ரீநிதா நெகிழ்ச்சி |
தமிழ், தெலுங்கு திரையுலகத்திற்கு ஈடாக தற்போது கன்னடத் திரையுலகமும் வளர்ந்துள்ளது. 'கேஜிஎப் 2, காந்தாரா' ஆகிய திரைப்படங்கள் கன்னடத் திரையுலகத்தை இந்திய அளவில் பேச வைத்த படங்களாக அமைந்தன.
கர்நாடக மாநிலத் தலைநகரான பெங்களூருவில் சில தனியார் ஸ்டுடியோக்கள் மட்டுமே உள்ளன. அருமையான தட்பவெப்ப நிலை கொண்ட அந்த ஊரில் அரசு சார்பில் பிலிம் சிட்டி எதுவும் இதுவரை அமைக்கப்படவில்லை.
தற்போது மைசூரில் பிலிம் சிட்டி அமைக்கப்படும் என கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். கன்னடத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய கட்டடத்தைத் திறந்து வைத்து பேசுகையில் அதை அவர் அறிவித்தார்.
மறைந்த கன்னட நடிகரான ராஜ்குமார் கன்னட சினிமாவுக்காக பிலிம் சிட்டி அமைக்க வேண்டும் என்று எப்போதோ கோரிக்கை வைத்திருந்தார். ஆனால், எந்த ஒரு மாநில அரசும் அதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.
இந்நிலையில் மைசூரில் அரசு சார்பில் 100 ஏக்கர்நிலம் வழங்கப்பட்டுள்ளது. பிபிபி மாடலில் அங்கு விரைவில் அரசு பிலிம் சிட்டி அமைக்கப்படுமென முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும், மாநில அரசு சார்பில் ஓடிடி நிறுவனம் ஆரம்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளார்.