நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! | தேவி ஸ்ரீ பிரசாதிற்கு ஜோடியாகும் நடிகை யார் தெரியுமா? | பிளாஷ்பேக்: “தீபாவளி” நாளன்று திரையில் தேசப்பற்றை விதைத்த “கப்பலோட்டிய தமிழன்” | அம்மாவுக்கும் மகளுக்கும் ஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாடிய மகிழ்ச்சியில் காவ்யா மாதவன் | பஹத் பாசிலின் கண்களில் தெரியும் வெறித்தனம் ; சிலாகிக்கும் ராஜமவுலியின் மகன் | தீபாவளி வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த் |
தமிழ், தெலுங்கு திரையுலகத்திற்கு ஈடாக தற்போது கன்னடத் திரையுலகமும் வளர்ந்துள்ளது. 'கேஜிஎப் 2, காந்தாரா' ஆகிய திரைப்படங்கள் கன்னடத் திரையுலகத்தை இந்திய அளவில் பேச வைத்த படங்களாக அமைந்தன.
கர்நாடக மாநிலத் தலைநகரான பெங்களூருவில் சில தனியார் ஸ்டுடியோக்கள் மட்டுமே உள்ளன. அருமையான தட்பவெப்ப நிலை கொண்ட அந்த ஊரில் அரசு சார்பில் பிலிம் சிட்டி எதுவும் இதுவரை அமைக்கப்படவில்லை.
தற்போது மைசூரில் பிலிம் சிட்டி அமைக்கப்படும் என கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். கன்னடத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய கட்டடத்தைத் திறந்து வைத்து பேசுகையில் அதை அவர் அறிவித்தார்.
மறைந்த கன்னட நடிகரான ராஜ்குமார் கன்னட சினிமாவுக்காக பிலிம் சிட்டி அமைக்க வேண்டும் என்று எப்போதோ கோரிக்கை வைத்திருந்தார். ஆனால், எந்த ஒரு மாநில அரசும் அதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.
இந்நிலையில் மைசூரில் அரசு சார்பில் 100 ஏக்கர்நிலம் வழங்கப்பட்டுள்ளது. பிபிபி மாடலில் அங்கு விரைவில் அரசு பிலிம் சிட்டி அமைக்கப்படுமென முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும், மாநில அரசு சார்பில் ஓடிடி நிறுவனம் ஆரம்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளார்.