நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கன்னடத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் காந்தாரா. கன்னடத்தில் மட்டுமல்ல தென்னிந்திய அளவில் அந்த படம் மிகப்பெரிய வரவேற்பையும் வெற்றியும் பெற்றது. வசூலையும் வாரிக் குவித்தது. இந்த படத்தில் கதாநாயகனாக நடித்ததுடன் படத்தையும் இயக்கியிருந்தார் நடிகர் ரிஷப் ஷெட்டி. சிறந்த நடிப்பிற்கான தேசிய விருதையும் பெற்றார். இந்த படத்தின் வெற்றி கொடுத்த உற்சாகத்தில் அடுத்ததாக காந்தாரா படத்தின் இரண்டாம் பாகத்தை காந்தாரா சாப்டர் 1 என்கிற பெயரில் உருவாக்கும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த படம் அடுத்த வருடம் வெளியாக இருக்கிறது என்பதையும் முன்கூட்டியே தேதியுடன் அறிவித்தும் விட்டார்.
பெரும்பாலும் ரிஷப் ஷெட்டிக்கு தனது சொந்த ஊரான உடுப்பி தாலுகாவில் உள்ள கெரடி கிராமத்தில் தன்னுடைய படங்களின் படப்பிடிப்பை நடத்த வேண்டும் என ரொம்பவே விருப்பம் இருந்தது. பலமுறை லொகேஷன்கள் பார்த்தாலும் அது கைகூடாமல் போனது. அதே சமயம் காந்தாரா படத்தில் தனது சொந்த ஊரில் உள்ள வனப்பகுதியிலேயே பெரும்பாலான படப்பிடிப்பை நடத்தி தனது விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டார் ரிஷப் ஷெட்டி. இந்த இரண்டாம் பாகமும் பெரும்பாலும் அதே பகுதியில் தான் நடைபெற இருக்கிறது.
இந்த நிலையில் சமீபத்தில் தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றில் நடிகர் ராணா நடத்தும் டாக் ஷோவில் பங்கேற்ற ரிஷப் ஷெட்டி கூறும்போது, “எனது சொந்த ஊரை ஒரு சினிமா நகரமாக மாற்ற விரும்புகிறேன். அதற்கு கெரடி பிலிம் சிட்டி (கே எப் சி) என்றும் மனதிற்குள் பெயர் வைத்திருக்கிறேன். இந்தப் பகுதியில் பெரிய அளவில் படங்கள் உருவானதில்லை. ஆனால் காந்தாரா இந்த பகுதியை பிரபலப்படுத்தி விட்டது” என்று கூறியுள்ளார்.