சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு |
நடிகை த்ரிஷா திரையுலகில் நுழைந்து கிட்டத்தட்ட தனது 22 வருட பயணத்தில் இருக்கிறார். தற்போதும் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக, சில படங்களில் கதையின் நாயகியாக நடித்தபடி முதல் வரிசை நாயகியாகவே இருக்கிறார். அதேசமயம் சிலருடன் காதல் கிசுகிசுக்களில் சிக்கி, இன்னொரு பக்கம் திருமணம் நிச்சயதார்த்தம் வரை சென்று நிறுத்தப்பட்டு என பல சச்சையான கசப்பான அனுபவங்களை தாண்டி தான் வெற்றிகரமாக பயணித்து வருகிறார் த்ரிஷா. கடந்த ஒரு வருடத்திற்கு மேலாகவே நடிகர் விஜய்யுடன் அவர் நெருக்கமாக இருப்பது போன்று இணைத்து பேசப்பட்டு செய்திகள் வெளியாகி வருகின்றன.
அப்படித்தான் நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணத்திற்காக விஜய், திரிஷா இருவரும் ஒரே விமானத்தில் கோவா சென்று வந்தார்கள் என்கிற தகவலும் அது குறித்த புகைப்படங்களும் வெளியாகி சமீபநாட்களாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. திரிஷாவை பொறுத்தவரை இந்த விஷயங்களுக்கு நேரடியாக எதுவும் ரியாக்ஷன் காட்ட மாட்டார். ஆனால் தனது சோசியல் மீடியா பதிவுகள் மூலமாக தனது பதிலை வேறு விதமாக சொல்வார்.
அப்படி சமீபத்தில் வெளியிட்ட பதிவு ஒன்றில், “மனிதர்களுக்கு உங்களை பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் நாய்களுக்கு உங்களை பிடிக்காமல் இருந்தால் தான் நீங்கள் கவலைப்பட வேண்டும். அப்படியானால் இதுதான் சுய பரிசோதனை செய்வதற்கான நேரம்” என்று கூறியுள்ளார்.
சமீபநாட்களாக தன் மீது சோசியல் மீடியாவில் சில மனிதர்கள் பேசும் வெறுப்பு பேச்சுகளால்தான் த்ரிஷா இப்படி ஒரு பதிவிட்டு இருக்கிறார் என்பது புரிந்து கொள்ள முடிகிறது.