செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
திரைப்பட விநியோகத்தில் ஈடுபட்டிருந்த சேலத்தை சேர்ந்த ஸ்ரீராமுலு நாயுடு, தனது நண்பர் நாராயணன் அய்யங்காருடன் இணைந்து சேலம் மார்டன் தியேட்டர் நிறுவனத்திறகு இணையாக கோவையில் ஒரு ஸ்டூடியோ கட்ட வேண்டும் என்று உருவாக்கியதுதான் கோவை சென்டிரல் ஸ்டூடியோ. அதன் பிறகு தயாரிப்பில் இறங்கிய இருவரும் தயாரித்த முதல் படம் 'ஆர்யமாலா'.
முதல் படத்தையே பிரமாண்டமாக தயாரிக்க வேண்டும், வெற்றியும் உறுதிப்பட இருக்க வேண்டும் என்று கருதி புகழ்பெற்ற நாட்டுப்புறக்கதையான காத்தவராயன் - ஆர்யமாலா கதையை எடுத்தனர். அப்போது வளர்ந்து வந்த இளம் நடிகர் மற்றும் ஆக்ஷன் ஹீரோவான பி.யூ.சின்னப்பாவை நாயகனாக ஒப்பந்தம் செய்தனர். நாயகியாக எம்.ஆர்.சந்தான லட்சுமியை நடிக்க வைத்தனர். இவர்கள் தவிர என்.எஸ்.கிருஷ்ணன் இதில் நாயகனின் நண்பராக நடித்தார், அவரது மனைவி மதுரம் அவருக்கு ஜோடியாக நடித்தார். அப்போது பிரபலமாக இருந்த பொம்மன் இரானி இயக்கினார்.
ஜி.ராமநாதனின் இசையில் உருவான பாடல்கள் அனைத்தும் ஹிட்டானது. படமும் ஹிட்டானது. அதுவரை பாகவதர் ரசிகர்களாக இருந்தவர்கள் சின்னப்பா ரசிகர்களாக மாறினர். பாகவதரிடம் அழகும் பாட்டும் மட்டுமே இருந்தது. சின்னப்பாவிடம் கூடுதலாக வீரமும், சண்டை திறனும் இருந்ததால் அவரது ரசிகர்களாக மாறினார்கள். ஆர்யமாலாவுக்கு விமர்சனம் எழுதிய அன்றைய பத்திரிகைகள் இனி சின்னப்பாதான் நம்பர் ஒண் நடிகர் என்றே குறிப்பிட்டனர்.