கர்நாடகாவில் 200 கோடி வசூல் சாதனையில் 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி |
ரிஷப் ஷெட்டி இயக்கம், நடிப்பில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் வெளியான கன்னடத் திரைப்படம் 'காந்தாரா சாப்டர் 1'. பான் இந்தியா படமாக வெளியான இப்படம் உலக அளவில் இதுவரையில் 765 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. விரைவில் 800 கோடி வசூலைக் கடந்து இந்த 2025ம் ஆண்டில் அதிக வசூலைக் குவித்துள்ள படம் என்ற சாதனையைப் புரிய வாய்ப்புள்ளது.
கர்நாடகாவில் இதுவரையில் அதிக வசூலைக் குவித்த படங்களில் 2022ல் வெளியான 'காந்தாரா படம் 185 கோடிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அந்த சாதனையை தற்போது 'காந்தாரா சாப்டர் 1' முறியடித்துள்ளது. அங்கு மட்டும் 200 கோடி வசூலைக் கடந்துள்ளது. கர்நாடகாவில் இதுவரை எந்த ஒரு கன்னடப் படமும் 200 கோடி வசூலைப் பெற்றதில்லை. கன்னட சினிமாவின் 90 வருட வரலாற்றில் இதுதான் முதல் சாதனை.
'கேஜிஎப் 2' படத்திற்குப் பிறகு 'காந்தாரா 1' படம் கன்னடத் திரையுலகத்தை இந்தியா முழுவதும் மீண்டும் பேச வைத்துள்ளது.