'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடி தானா? | கென் கருணாஸூக்காக காய்ச்சல் உடன் வந்த தனுஷ்! | மார்ச் 16ல் 'நூறு சாமி' படத்தின் பர்ஸ்ட் லுக் | இரண்டு பாகங்களாக பிரியும் இதயம் முரளி! | மே மாதத்தில் திட்டமிடும் 'கருப்பு' படக்குழு! | மென்மையானவர் விஜய்... நல்ல குடும்பஸ்தர் அஜித்: மனம் திறந்த தமன்னா | 'திரு.மாணிக்கம்' திரைக்கதை புத்தகமாக வெளியீடு | தெலுங்கானா டிக்கெட் கட்டண உயர்வு : தடையை நீக்கிய உச்சநீதிமன்றம் | 3 படங்கள் 1000 கோடி முதலீடு, மீண்டு வருமா தயாரிப்பு நிறுவனம் ? | முதல்வர் ஸ்டாலினின் வாழ்க்கை படமாகிறது: சமுத்திரக்கனி இயக்குகிறார்? |

மலையாள திரையுலகின் நடிகர் சங்கமான 'அம்மா' பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இதில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. ஆனால் இந்த நிகழ்ச்சியின் பாதுகாப்பிற்காக வரவழைக்கப்பட்டிருந்த பவுன்சர்கள், கூட்டம் நடந்த அரங்கிற்குள் பத்திரிகையாளர்களை நுழைய விடாமல் தடுத்ததுடன், அவர்களை வெளியே கொட்டும் மழையில் காத்திருக்க வைத்தனர். இந்த நிலையில் பத்திரிகையாளர்களுக்கு ஏற்பட்ட இந்த சங்கடத்திற்கு தற்போது புதிய பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நடிகர் சித்திக் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாக கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, “அம்மா பொதுக்குழு கூட்டம் நடைபெற்றபோது பத்திரிக்கையாளர்களுக்கு மன உளைச்சல் ஏற்படும் விதமாக சில நிகழ்வுகள் நடந்தது. இதற்கு நானே முழு பொறுப்பேற்றுக் கொள்கிறேன். என்னுடைய அஜாக்கிரதையால் தான் இது நடந்தது. சில சொந்த காரணங்களால் நான் அவசரமாக அந்த அரங்கை விட்டு வெளியேற வேண்டி இருந்தது. அதனாலேயே பத்திரிக்கையாளர்களுக்கு இந்த சங்கடம் நிகழ்ந்தது. அவர்களிடம் நான் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக் கொள்வதுடன் எதிர்காலத்தில் இதுபோன்று ஒரு நிகழ்வு நடக்காமல் பார்த்துக் கொள்வேன் என்று உறுதியும் அளிக்கிறேன்” என்று கூறியுள்ளார் நடிகர் சித்திக்.




