வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் | தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர் | சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது | மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா | என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் தயாரிப்பாளராகி இருக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன் | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் |

மலையாள திரையுலகில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் சங்க தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் நடிகை ஸ்வேதா மேனன் போட்டியிட்டு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது கடந்த 2018ல் 'மீ டூ' பிரசாரம் மூலம் நடிகைகள் பலரும் தாங்கள் சந்தித்த பாலியல் பிரச்னைகளை வெளியிட்டு வந்தனர். அதுகுறித்து ஹோட்டல் ஒன்றில் பல நடிகைகளை அழைத்து அவர்களது மீ டூ அனுபவங்கள் குறித்து நடிகர் சங்கத்தால் விரிவாக கேட்கப்பட்டு அது வீடியோவாகவும் ரெக்கார்ட் செய்யப்பட்டது. ஆனால் அதன் பின் கடந்த 2025ல் அந்த மெமரி கார்டு காணாமல் போன விவகாரம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
அப்போது நடிகர் சங்க பொறுப்பில் இருந்த நடிகை குக்கு பரமேஸ்வரனிடம் தான் அந்த மெமரி கார்டு கடைசியாக ஒப்படைக்கப்பட்டது என்றும் அவர் அதை தனது சுய லாபங்களுக்காக மறைத்து விட்டார் என்றும் கடந்த நடிகர் சங்க தேர்தல் பிரசாரத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இருப்பினும் மீண்டும் நடிகர் சங்க பொதுச் செயலாளராக குக்கு பரமேஸ்வரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த சமயத்தில் இந்த மெமரி கார்டு குறித்து விசாரிக்க ஒரு குழு அமைக்கப்படும் என்று ஸ்வேதா மேனன் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அந்த குழுவினரின் விசாரணையில், அந்த மெமரி கார்டு 2018ல் மறைந்த குணச்சித்திர நடிகை கேபிஏசி லலிதாவிடம் ஒப்படைக்கப்பட்டது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து குக்கு பரமேஸ்வரன் மீதான குற்றச்சாட்டு தீர்த்து வைக்கப்பட்டுள்ளது, அதேசமயம் கேபிஏசி லலிதா மறைந்து விட்டதால் அந்த மெமரி கார்டு குறித்து என்ன செய்யலாம் என அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஸ்வேதா மேனன் கூறியுள்ளார்.




