‛ஜெயிலர் 2' படப்பிடிப்பில் யோகி பாபுவிடம் அடிக்கடி சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொண்ட ரஜினிகாந்த் | பாலகிருஷ்ணாவுடன் செல்பி எடுக்க பயப்படும் ‛காந்தாரா' ஒளிப்பதிவாளர் | ‛ஆடு 3' படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடி இருக்கிறாரா நிகிலா விமல் ? ; இயக்குனர் பதில் | ஒருவர் பின் ஒருவராக போகிறார்கள் ; நண்பர் மறைவால் அமிதாப் பச்சன் வேதனை | ஷோரூம் திறப்பு விழாவில் அரசியல் பஞ்ச் டயலாக் பேசிய ரவி மோகன்! | தனது 100வது படத்தில் முதல் பட நாயகனான மோகன்லாலை நடிக்க வைக்கும் பிரியதர்ஷன்! | அஜித்துக்கு 30 லட்சம் மதிப்பிலான காரை பரிசளித்த மஹிந்திரா நிறுவனம்! | விஜய் குறித்த கேள்வி: பதில் கொடுக்காமல் மவுனமாக கடந்து சென்ற திரிஷா! | உயரே சென்றாலும் உதவியவர்களை மறக்காதே: கென் கருணாஸிற்கு தனுஷ் அறிவுரை | '29' படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது! |

கேரள திரையரங்குகளில் டிக்கெட் கட்டணத்திற்கான ஜிஎஸ்டி உடன் சேர்த்து வசூலிக்கப்படும் அதிகப்படியான கேளிக்கை வரியை நீக்குவது, திரையரங்குகளுக்கு என விதிக்கப்படும் மின்சார கட்டணத்தை முறைப்படி குறைத்து ஒழுங்குபடுத்துவது உள்ளிட்ட பல கோரிக்கைகளை கேரள அரசிடம் தொடர்ந்து மலையாள திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், தியேட்டர் அதிபர்கள் சங்கம், விநியோகஸ்தர் சங்கம் ஆகியவை வலியுறுத்தி வந்தன.
ஆனால் அவற்றில் ஒரு முடிவு எட்டப்படாத நிலையில் ஜனவரி 22ம் தேதி ஒட்டுமொத்த திரையுலகமும் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்வதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தனர். இந்த நிலையில் தற்போது கேரளா பிலிம் சேம்பர் தலைவர் அனில் வி தாமஸை அழைத்து கேரளா கலாச்சாரத்துறை அமைச்சர் சாஜி செரியன் இவர்களது குறைகளை நிவர்த்தி செய்வதாக வாக்குறுதி அளித்துள்ளதன் பேரில் இந்த ஒரு நாள் வேலை நிறுத்தத்தை மலையாள திரையுலகம் கைவிட்டுள்ளது.