2046ல் என்ன நடக்கும் ? ரஜிஷா விஜயனின் புதிய படம் பதில் சொல்லும் | ஆல்பம் பாடலில் அதிர வைக்கும் அழகுடன் மஞ்சு வாரியர் | ‛ஐ நோபடி' படப்பிடிப்பை நிறைவு செய்த பிரித்விராஜ் | ‛திரிஷ்யம் 3' கிளைமாக்ஸ் ஷாக்கிங் ஆக இருக்கும் : நடிகை ஆஷா சரத் | சம்பளத்துக்கு பதிலாக ஷேர் வாங்கும் அல்லு அர்ஜுன்! | மீண்டும் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்ட திரிஷா! | 'வித் லவ்' படத்தின் வசூல் விவரம் குறித்து தகவல் இதோ! | தெலுங்கு படத்தை இயக்கும் 'மார்கோ' பட இயக்குனர்! | ஜி.வி. பிரகாஷூக்கு மாமாவாக நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்த விஜய் ஆண்டனி! | இரண்டாவது முறையாக பாலிவுட் இளம் நடிகருடன் இணையும் ராஷ்மிகா! |

கேரள திரையரங்குகளில் டிக்கெட் கட்டணத்திற்கான ஜிஎஸ்டி உடன் சேர்த்து வசூலிக்கப்படும் அதிகப்படியான கேளிக்கை வரியை நீக்குவது, திரையரங்குகளுக்கு என விதிக்கப்படும் மின்சார கட்டணத்தை முறைப்படி குறைத்து ஒழுங்குபடுத்துவது உள்ளிட்ட பல கோரிக்கைகளை கேரள அரசிடம் தொடர்ந்து மலையாள திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், தியேட்டர் அதிபர்கள் சங்கம், விநியோகஸ்தர் சங்கம் ஆகியவை வலியுறுத்தி வந்தன.
ஆனால் அவற்றில் ஒரு முடிவு எட்டப்படாத நிலையில் ஜனவரி 22ம் தேதி ஒட்டுமொத்த திரையுலகமும் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்வதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தனர். இந்த நிலையில் தற்போது கேரளா பிலிம் சேம்பர் தலைவர் அனில் வி தாமஸை அழைத்து கேரளா கலாச்சாரத்துறை அமைச்சர் சாஜி செரியன் இவர்களது குறைகளை நிவர்த்தி செய்வதாக வாக்குறுதி அளித்துள்ளதன் பேரில் இந்த ஒரு நாள் வேலை நிறுத்தத்தை மலையாள திரையுலகம் கைவிட்டுள்ளது.




