நான் ஏன் பிறந்தேன், குரு சிஷ்யன், ஆம்பள - ஞாயிறு திரைப்படங்கள் | கோர்ட் உத்தரவை மீறி பேட்டி : மன்னிப்பு கேட்ட ரவி மோகன் | சென்னையில் தான் இருக்கிறேன், ஐதராபாத்தில் குடியேறவில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | ரேனிகுண்டா 2 படத்தின் முதல் பார்வை வெளியீடு | சூர்யாவை தொடர்ந்து அர்ஜூனுக்கும் வெற்றி : 50 கோடியை நெருங்கும் பிளாஸ்ட் | மஞ்சும்மல் பாய்ஸ் மாதிரி தமிழகத்தில் பாலன் ஓடுமா? | அரசன் படத்திற்காக 2 மாதங்களாக இரவில் நடக்கும் படப்பிடிப்பு | 'லிங்கம்' வெப் சீரீஸ் 26ம் தேதி வெளியாகிறது | இங்கிலாந்து மன்னரின் 'சர்' பட்டம் பெற்ற ஹாலிவுட் நடிகர் | பிளாஷ்பேக்: உடலால் வாழ்ந்து, உடலால் வீழ்ந்த உசிலைமணி |

மலையாள திரையுலகில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் சங்க தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் நடிகை ஸ்வேதா மேனன் போட்டியிட்டு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது கடந்த 2018ல் 'மீ டூ' பிரசாரம் மூலம் நடிகைகள் பலரும் தாங்கள் சந்தித்த பாலியல் பிரச்னைகளை வெளியிட்டு வந்தனர். அதுகுறித்து ஹோட்டல் ஒன்றில் பல நடிகைகளை அழைத்து அவர்களது மீ டூ அனுபவங்கள் குறித்து நடிகர் சங்கத்தால் விரிவாக கேட்கப்பட்டு அது வீடியோவாகவும் ரெக்கார்ட் செய்யப்பட்டது. ஆனால் அதன் பின் கடந்த 2025ல் அந்த மெமரி கார்டு காணாமல் போன விவகாரம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
அப்போது நடிகர் சங்க பொறுப்பில் இருந்த நடிகை குக்கு பரமேஸ்வரனிடம் தான் அந்த மெமரி கார்டு கடைசியாக ஒப்படைக்கப்பட்டது என்றும் அவர் அதை தனது சுய லாபங்களுக்காக மறைத்து விட்டார் என்றும் கடந்த நடிகர் சங்க தேர்தல் பிரசாரத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இருப்பினும் மீண்டும் நடிகர் சங்க பொதுச் செயலாளராக குக்கு பரமேஸ்வரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த சமயத்தில் இந்த மெமரி கார்டு குறித்து விசாரிக்க ஒரு குழு அமைக்கப்படும் என்று ஸ்வேதா மேனன் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அந்த குழுவினரின் விசாரணையில், அந்த மெமரி கார்டு 2018ல் மறைந்த குணச்சித்திர நடிகை கேபிஏசி லலிதாவிடம் ஒப்படைக்கப்பட்டது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து குக்கு பரமேஸ்வரன் மீதான குற்றச்சாட்டு தீர்த்து வைக்கப்பட்டுள்ளது, அதேசமயம் கேபிஏசி லலிதா மறைந்து விட்டதால் அந்த மெமரி கார்டு குறித்து என்ன செய்யலாம் என அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஸ்வேதா மேனன் கூறியுள்ளார்.