தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் 5 படங்கள்...!! | இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் |
மலையாள முன்னணி நடிகரான மம்முட்டி புகைப்பட ஆர்வலர் எங்கு சென்றாலும் தன்னுடன் கேமராவை எடுத்துச் செல்வது வழக்கம். தான் எடுக்கும் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிடுவார்.
இந்த நிலையில் கேரளாவில் பறவைகள் நிபுணரான கே.கே.நீலகண்டன் நூற்றாண்டு விழாவையொட்டி எர்ணாகுளத்தில் நடந்த கண்காட்சியில் பல்வேறு அரிய பறவைகளின் புகைப்படங்கள் வைக்கப்பட்டது. அதில் மம்முட்டி எடுத்த 'புல் புல்' என்ற சிறிய பறவை ஒன்றின் புகைப்படமும் இடம் பெற்றிருந்தது. ஒரு சிறிய இலையின் விழிம்பில் 'புல் புல்' அமர்ந்திருக்கும் இந்த படம் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது.
பின்னர் இந்த படம் ஏலம் விடப்பட்டது. இதனை தொழில் அதிபர் அச்சு உல்லட்டில் என்பவர் 3 லட்சத்திற்கு ஏலம் எடுத்தார். இந்த தொகை ஒரு பறவைகள் அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டது. இந்த படத்தை தான் கட்டிவரும் 3 நட்சத்திர ஓட்டலின் வரவேற்பு கூடத்தில் பெரிதாக வைக்கப்போவதாக அச்சு உல்லட்டில் தெரிவித்தார்.