ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' | மனைவிக்கு ‛தடா' போட்ட சார்பட்டா நடிகர் | நடிகருக்காக சீன்களை சுடும் இயக்குனர்கள் | லாவண்யாவின் ஸ்(வரம்) |

ஐதரபாத்தில் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ளது ராமோஜி பிலிம் சிட்டி. அங்கு தெலுங்குப் படங்கள் மட்டுமல்லாது பல தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மற்ற மொழிப் படங்களின் படப்பிடிப்புகளும் நடக்கும். தமிழில் உள்ள டாப் நடிகர்களின் படங்களின் படப்பிடிப்பு அங்குதான் அதிகமாக நடைபெற்றுள்ளது. சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில் அந்த ஸ்டுடியோ அமைந்துள்ளது. அரங்குகள், எடிட்டிங் உள்ளிட்ட வசதிகள் என ஒரு முழு படத்தை உருவாக்குவதற்குத் தேவையான அனைத்து வசதிகளும் அங்கே உள்ளன.
கஜோல் நடித்து வெளியாக உள்ள 'மா' படத்திற்கான பேட்டி ஒன்றில் பேசிய போது, “ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு இருந்தால் ஒரு விதமான சங்கடம் இருக்கும். ஒரு விதமான பய உணர்வு வரும். அந்த இடத்தை விட்டு உடனே வெளியேறத் தூண்டும். சில இடங்களில் அப்படியான எண்ணம் வரும். மீண்டும் அங்கு வரக் கூடாது என்று நினைப்போம். அது போலத்தான் எனக்கு ராமோஜி பிலிம் சிட்டியில் உணர்வு வரும். உலகத்திலேயே மிகவும் பயமான ஒரு இடம் அது,” என்று கூறியுள்ளார்.
கஜோல் நடித்துள்ள 'மா' படம் ஒரு பேய்ப் படம், அடுத்த வாரம் ஜுன் 27ம் தேதி வெளியாக உள்ளது. 'பேய்' பற்றிய ஒரு பய உணர்வு ராமோஜி பிலிம் சிட்டியில் இருக்கும் என்ற அர்த்தத்தில்தான் கஜோல் பேசியுள்ளார். ஆனால், அப்படி என்ன ஒரு அனுபவத்தை அங்கு பெற்றார் என்பது குறித்து அவர் விளக்கமாகச் சொல்லவில்லை.
இந்த பேச்சு தெலுங்குத் திரையுலகத்தினரிடம் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.