சிறையில் அடைக்க சொன்ன டாக்டர் : சமந்தா பதிலடி | மூன்று மணி நேரம் ஓடப் போகும் 'இந்தியன் 2' | சிவகார்த்திகேயன் - சிபி சக்ரவர்த்தி இணையும் படத்தின் டைட்டில் பாஸ்? | கர்ப்ப காலத்தில் யோகா செய்த தீபிகா படுகோனே | கவுண்டம்பாளையம் ரிலீஸ் தள்ளிவைப்பு : படத்தை திரையிட விடாமல் மிரட்டுவதாக ரஞ்சித் புகார் | சார்-ல் இணைந்து பாடிய ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி | டீன்ஸ் கிராபிக்ஸ் : கோவை போலீசில் புகார் அளித்த பார்த்திபன் | விஜயகாந்தை ஏஐ தொழில்நுட்பத்தில் பயன்படுத்த யாரும் அனுமதி பெறவில்லை : தேமுதிக., | விஜய், மோகன்லாலுடன் இணைந்து நடிக்கும் கோமல் சர்மா | வானத்தில் பறந்த இந்தியன் கொடி |
தெலுங்கு சினிமாவில் மாஸ் ஹீரோவாக இருப்பவர் பவன் கல்யாண். இவர் ஒரு படத்தில் நடிக்க 70 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலின் போது ஆந்திராவில் சட்டசபை தேர்தலும் சேர்ந்தே நடைபெற்றது. அப்போது தெலுங்கு தேசம் மற்றும் பாஜக கட்சிகளுடன் இணைந்து பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியும் போட்டியிட்டு வெற்றி பெற்றது. இதன் காரணமாக தற்போது ஆந்திராவின் துணை முதல்வராகியிருக்கிறார் பவன் கல்யாண்.
சமீபத்தில் அவர் ஆந்திர மாநில தலைமைச் செயலகத்திற்கு சென்றபோது அவருக்கு சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கு பவன் கல்யாண், 3 நாட்கள் மட்டுமே தலைமைச் செயலகத்திற்கு நான் வந்துள்ளேன். அதனால் எனக்கு சம்பளம் வேண்டாம் என்று மறுத்திருக்கிறார். அதோடு தற்போது ஆந்திரா மாநிலத்தில் நிதிநிலைமை ரொம்ப மோசமாக உள்ளது. அதனால் எனக்கு சம்பளம் வாங்கவே மனமில்லை. இனிமேல் சம்பளம் வாங்காமலேயே துணை முதலமைச்சராக பணியாற்ற போகிறேன் என்றும் கூறியிருக்கிறார் பவன் கல்யாண்.
இவரது இந்த அறிவிப்பை பலரும் வரவேற்று பாராட்டி உள்ளனர்.