Advertisement

சிறப்புச்செய்திகள்

ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு | “என் மகள் எனக்கு மூன்றாம் மனுஷி தான்.. அஞ்சு பைசா கூட தரமாட்டேன்” ; ஸ்வேதா மேனன் ஓபன் டாக் | எட்டு வருடத்திற்கு பிறகு மீண்டும் இணையும் துருவா சார்ஜா, ரச்சிதா ராம் ஜோடி | 'விலாயத் புத்தா' கதையும் 'புஷ்பா' கதையும் ஒன்றா ? பிரித்விராஜ் விளக்கம் | அதிதி ராவ் ஹைதரி பெயரில் வாட்ஸ்அப்பில் மோசடி ; நடிகை எச்சரிக்கை | தெலுங்கில் ரீமேக் ஆகும் 'லப்பர் பந்து' | ஆர்யாவிற்கு ஜோடியாகும் அனுபமா பரமேஸ்வரன்! | 'ஸ்பிரிட்' படத்தில் சிரஞ்சீவி? சந்தீப் ரெட்டி வங்காவின் பதில் இதோ! | கமல், ரஜினி இணையும் படம்: டிசம்பர் 12ல் அறிவிக்கப்படுமா? | எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை: ராஜமவுலி பேச்சால் புது சர்ச்சை |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

'விலாயத் புத்தா' கதையும் 'புஷ்பா' கதையும் ஒன்றா ? பிரித்விராஜ் விளக்கம்

17 நவ, 2025 - 04:04 IST
எழுத்தின் அளவு:
Is-the-story-of--Vilayath-Buddha-the-same-as-the-story-of-Pushpa-Prithvirajs-explanation
Advertisement


நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் மலையாளத்தில், வரும் நவம்பர் 21ம் தேதி வெளியாக இருக்கும் படம் 'விலாயத் புத்தா'. இந்த படத்தை ஜெயன் நம்பியார் இயக்கியுள்ளார். எழுத்தாளர் இந்து கோபன் எழுதிய விலாயத் புத்தா என்கிற நாவலை தழுவி இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் அடுத்தடுத்து வெளியான படத்தின் டீசர் மற்றும் டிரைலரைப் பார்த்தபோது இது தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தின் சாயலில் இருப்பதாக ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்தனர்.

காரணம் இந்த படத்தில் பிரித்விராஜ் டபுள் மோகனன் என்கிற சந்தன மர கடத்தல்காரனாக நடித்துள்ளார் என்பதுதான். டீசரில் கூட, நான் புஷ்பா அளவுக்கு பெரிய ஆள் இல்லை என்று பிரித்விராஜ் கூறும் வசனம் இடம் பெற்றிருந்தது. இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பிரித்விராஜ், புஷ்பா படத்தின் கதைக்கும் விலாயத் புத்தா படத்தின் கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறும்போது, “இந்த படத்தின் கதையை மறைந்த அய்யப்பனும் கோஷியும் இயக்குனர் சாச்சி படமாக்க திட்டமிட்டு என்னிடம் கூறியபோது புஷ்பா முதல் பாகமே ரிலீஸ் ஆகி இருக்கவில்லை. தவிர இது எழுத்தாளர் இந்துகோபன் எழுதிய நாவல். அதன்பிறகு இந்த படத்தை இப்போது முடித்து ரிலீஸ் செய்வதற்குள் புஷ்பா படத்தின் இரண்டு பாகங்களும் வெளியாகிவிட்டன. என்னுடைய டபுள் மோகனன் கதாபாத்திரத்திற்கும் புஷ்பராஜ் கதாபாத்திரத்திற்கும் எந்த ஒற்றுமையும் இல்லை. இரண்டுக்கும் கதைக்களம் ஒன்று போல தோன்றினாலும் கதையில் எந்த சம்பந்தமும் இல்லை. அதனால் தான் காலதாமதம் ஆனாலும் கூட இந்த படத்தை விடாமுயற்சியுடன் படமாக்கி திரைக்கு கொண்டு வந்திருக்கிறோம்” என்று கூறினார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார்ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த ... எட்டு வருடத்திற்கு பிறகு மீண்டும் இணையும் துருவா சார்ஜா, ரச்சிதா ராம் ஜோடி எட்டு வருடத்திற்கு பிறகு மீண்டும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in