ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் | நிவேதா பெத்துராஜுக்கு திருமணம் | 'திரெளபதி' இரண்டாம் பாகத்தில் சரித்திர கதை | பிளாஷ்பேக் : காமெடி நாயகனாக விஜயகாந்த் நடித்த படம் | சிரிப்பு சத்தம், காமெடி பஞ்சத்தில் தவிக்கும் தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : உலகம் முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோற்ற கதை | ‛பெத்தி' பட பாடலுக்கு ஆயிரம் பேருடன் நடனமாடிய ராம்சரண் | தீபாவளி போட்டியில் டீசல் : ஆக்ஷன் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் |
மகதீரா, பாகுபலி, பாகுபலி 2, மெர்சல், மணிகர்னிகா, தலைவி, ஆர்ஆர்ஆர் என பல படங்களுக்கு கதை எழுதியவர் ராஜமவுலியின் தந்தையான விஜயேந்திர பிரசாத். தற்போது பாலிவுட்டில் தயாராகும் சீதா என்ற படத்திற்கு கதை எழுதியுள்ளார்.
இந்நிலையில் அடுத்தபடியாக மகேஷ்பாபு நடிக்கும் புதிய படத்திற்காகவும் ஒரு கதையை எழுதி கொடுத்துள்ள விஜயேந்திர பிரசாத், அடுத்தபடியாக பவன்கல்யாணுக்காக ஒரு பவர்புல்லான கதையை எழுதி வருகிறாராம். இந்த கதையை பவன்கல்யாணிடம் அவர் சொன்னபோது தனக்கு மிகவும் பிடித்திருப்பதாக சொன்னதை அடுத்து அந்த ஸ்கிரிப்ட் வேலைகளில் இறங்கியிருக்கிறார் விஜயேந்திர பிரசாத்.
தற்போது அய்யப்பனும் கோஷியும் தெலுங்கு ரீமேக் மற்றும் ஹரிஹர வீரமல்லு ஆகிய படங்களில் நடித்து வரும் பவன் கல்யாண் அப்படங்களை முடித்ததும் விஜயேந்திர பிரசாத் எழுதி வரும் கதையில் நடிக்கப்போகிறார்.