100 நாளுக்கு பின்தான் இனி ஓ.டி.டி.யில் சினிமா; தியேட்டர்கள் அதிபர்கள் சங்கம் அதிரடி | ரேஸில் கார் பழுது : அஜித்தின் பாசிட்டிவ் ரிப்ளே...! | 48 மணிநேரம் தூக்கமில்லை : ஷாலினி பாண்டே | 16 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடை செய்ய வேண்டும் : சோனு சூட் | ஆளுமை உரிமை கேட்டு பவன் கல்யாண் வழக்கு | விவாகரத்து வதந்தி : கடும் கோபத்தை வெளிப்படுத்திய அபிஷேக் பச்சன் | சூர்யாவின் கருப்பு ரிலீஸ் மீண்டும் தள்ளிப் போகிறதா? | ரெட்ட தல படத்தின் டார்க் தீம் பாடல் வெளியானது | சோசியல் மீடியாவில் போட்ட பதிவால் ட்ரோலில் சிக்கிய தமன் | இந்த வார ரிலீஸ் : தியேட்டர்களைக் காப்பாற்றும் 'படையப்பா' |

மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ரத்னகுமார். அதன் பின்னர் அவரது இயக்கத்தில் வெளியான ‛ஆடை, குலு குலு' ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
‛மாஸ்டர், லியோ, விக்ரம்' உள்ளிட்ட படங்களுக்கு கூடுதல் திரைக்கதை எழுதியவர் தற்போது ‛சர்தார் 2, கராத்தே பாபு' ஆகிய படங்களுக்கு கூடுதல் திரைக்கதை எழுதியுள்ளார்.
நீண்ட நாட்களாக இவர் இயக்கும் படம் குறித்து எந்தவொரு அப்டேட்டும் வெளியாகவில்லை என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில் நேற்று ரத்னகுமார் அவரது சமூக வலைதள பக்கத்தில் கையில் மைக் உடன் ஒரு போட்டோவை பகிர்ந்திருந்தார்.
தற்போது இது குறித்து நமக்கு கிடைத்த தகவலின் படி, ரத்னகுமார் அடுத்து கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் மற்றும் லோகேஷ் கனகராஜின் ஜீ ஸ்குவாட் என இரு நிறுவனங்களின் தயாரிப்பில் புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நாயகனாக ரெட்ரோ படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த விது என்பவர் நடிக்கிறாராம். இப்போது இதன் படப்பிடிப்பு சென்னை சிட்டி சென்டரில் நடைபெற்று வருகிறது.




