22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ரத்னகுமார். அந்தப்படம் ஓரளவுக்கு பேசப்பட அதன் பின்னர் அவரது இயக்கத்தில் அமலாபால் நடிப்பில் ஆடை, சந்தானம் நடிப்பில் குலு குலு ஆகிய படங்கள் வெளிவந்தன. ஆனால் இந்த இரு படங்களும் வெற்றியை பெறவில்லை.
இதற்கிடையே லோகேஷ் கனகராஜின் ‛மாஸ்டர், விக்ரம், லியோ' உள்ளிட்ட படங்களுக்கு கூடுதலாக திரைக்கதை, வசனமும் எழுதினார். தற்போது சர்தார் 2, கராத்தே பாபு ஆகிய படங்களுக்கு கூடுதல் திரைக்கதை, வசனம் எழுதுகிறார்.
இதைத்தொடர்ந்து ரத்னகுமார் அடுத்து ஒரு படத்தை இயக்க போகிறார். இதை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரிக்க போகிறது. இதில் நாயகனாக ‛ரெட்ரோ' படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த விது நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.