விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் | இன்று முதல் ‛இட்லி கடை' டப்பிங் பணி துவங்குகிறது | ஜெய்யின் ‛சட்டென்று மாறுது வானிலை' |
பழம்பெரும் இசையமைப்பாளரும், பாடகருமான கண்டசாலாவின் இரண்டாவது மகன் கண்டசாலா ரத்னகுமார். இவர் நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாரடைப்பால் காலமானார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு பின்னணிக் குரல் கொடுத்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட டிவி தொடர் எபிசோடுகளுக்குக் குரல் கொடுத்திருக்கிறார்.
ஒரு மொழியில் வெற்றி பெற்று வரவேற்பைப் பெற்ற படங்கள் வேறு மொழிகளுக்கு டப்பிங் செய்யப்படும் போது அப்படங்களில் நடித்துள்ள ஹீரோக்களுக்கு ரத்னகுமார் தான் டப்பிங் கொடுப்பார்.
கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக அவர் குரல் கொடுக்காத ஹீரோக்களே இல்லை என்று சொல்லலாம். மேலும், தொடர்ந்து 8 மணி நேரம் டப்பிங் பேசி இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸிலும் இடம் பிடித்துள்ளார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். கொரோனாவிலிருந்து மீண்டு குணமடைந்து வீடு திரும்ப வேண்டிய நிலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ளார்.
மறைந்த ரத்னகுமாருடைய மகள் வீணா கண்டசாலா பிரபல பாடகியாகவும், டப்பிங் கலைஞராகவும் இருக்கிறார். ரத்னகுமார் மறைவுக்குத் தெலுங்குத் திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெவித்துள்ளார்கள்.