தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்: புதிய தலைவராகும் ஜி.கே.எம். தமிழ்குமரன் | மீண்டும் ‛தி ராஜா சாப்' பட நிறுவனத்துடன் இணையும் பிரபாஸ்! | சிகிச்சைக்கு பிறகு அடியோடு மாறி விட்டேன்! -‛பாகுபலி' வில்லன் ராணா | பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிடம் 10 கோடி கேட்டு மிரட்டல்! | ‛டிராகன்-2' அப்டேட் கொடுத்த பிரதீப் ரங்கநாதன்- அஸ்வத் மாரிமுத்து! | 70வது பிலிம்பேர் விருதுகள் - அதிக விருதுகளை வென்ற 'அமரன்' | இது கமல் ரஜினி பட கணக்கு | சிறிய பட்ஜெட் படத்தை இயக்கும் சமுத்திரக்கனி! | ‛கல்கி 2898 ஏ.டி' படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | பிரதீப் ரங்கநாதன் இயக்குனருடன் கைகோர்க்கும் சிம்பு! |

பழம்பெரும் இசையமைப்பாளரும், பாடகருமான கண்டசாலாவின் இரண்டாவது மகன் கண்டசாலா ரத்னகுமார். இவர் நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாரடைப்பால் காலமானார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு பின்னணிக் குரல் கொடுத்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட டிவி தொடர் எபிசோடுகளுக்குக் குரல் கொடுத்திருக்கிறார்.
ஒரு மொழியில் வெற்றி பெற்று வரவேற்பைப் பெற்ற படங்கள் வேறு மொழிகளுக்கு டப்பிங் செய்யப்படும் போது அப்படங்களில் நடித்துள்ள ஹீரோக்களுக்கு ரத்னகுமார் தான் டப்பிங் கொடுப்பார்.
கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக அவர் குரல் கொடுக்காத ஹீரோக்களே இல்லை என்று சொல்லலாம். மேலும், தொடர்ந்து 8 மணி நேரம் டப்பிங் பேசி இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸிலும் இடம் பிடித்துள்ளார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். கொரோனாவிலிருந்து மீண்டு குணமடைந்து வீடு திரும்ப வேண்டிய நிலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ளார்.
மறைந்த ரத்னகுமாருடைய மகள் வீணா கண்டசாலா பிரபல பாடகியாகவும், டப்பிங் கலைஞராகவும் இருக்கிறார். ரத்னகுமார் மறைவுக்குத் தெலுங்குத் திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெவித்துள்ளார்கள்.