தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

மலையாளத் திரையுலகில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி பின்னர் குணசித்திர நடிகராக மாறி தேசிய விருதும் பெற்றவர் நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு. தற்போது வில்லத்தனம் வாய்ந்த கதாபாத்திரங்களிலும், கதையின் நாயகனாகவும் மாறி மாறி நடித்து வருகிறார். கடந்த வருடம் விக்ரம் நடிப்பில் வெளியான வீரதீர சூரன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழிலும் அடியெடுத்து வைத்தார். தற்போது நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் 2 படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சிவராஜ் குமார் நடிப்பில் உருவாகி வரும் டாட் என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதன் மூலம் கன்னட திரை உலகிலும் முதன்முறையாக அடியெடுத்து வைத்துள்ளார் சுராஜ் வெஞ்சாரமூடு. இந்த படத்தை அனில் கன்னேகண்டி என்பவர் இயக்குகிறார். தந்தை மகள் பாசத்தை மையப்படுத்தி இது உருவாகி உள்ளது. அந்த வகையில் ஒரே நேரத்தில் தமிழில் ஜெயிலர் 2 மற்றும் கன்னடத்தில் டாட் என இரண்டு படங்களில் சிவராஜ் குமாருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார் சுராஜ் வெஞ்சாரமூடு.