இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், சூரி, சுஹாஸ், மகிமா நம்பியார் மற்றும் பலர் நடிக்கும் படம் 'மண்டாடி'. இப்படத்தின் படப்பிடிப்பு ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி கடல் பகுதியில் வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது.
அப்போது கேமரா வைக்கப்பட்டிருந்த படகு திடீரென கடலில் தடுமாறியது. அதில் கேமரா கடலில் மூழ்கியது. சுமார் 60 லட்ச ரூபாய் மதிப்புள்ள 'ரெட்' கேமரா அது. மேலும், சில பொருட்களும் மூழ்கியதாகத் தெரிகிறது.
நல்ல வேளையாக வேறு யாரும் கடலில் மூழ்கவில்லை. மீனவர்கள் பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடத்தியதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இது குறித்து காவல் துறை விசாரணையும் நடந்து வருகிறதாம்.
கடலும் கடல் சார்ந்த இடங்களிலும் 'மண்டாடி' படப்பிடிப்பு நடந்து வருகிறது. அனுபவம் வாய்ந்த ஒளிப்பதிவாளர் எஸ்ஆர் கதிர் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார்.