‛சக்தி திருமகன்' முதல் ‛ஓஜி' வரை : இந்த வார ஓடிடி ஸ்பெஷல்....! | 'பைசன்' படத்தை பாராட்டிய பா.ஜ.,வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை! | ஹாட்ரிக் ரூ.100 கோடி வசூலை தந்த பிரதீப் ரங்கநாதன் | அக்டோபர் 31ல் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் தனுஷின் இட்லி கடை! | 5 நிமிட நடனத்திற்கு ஐந்து கோடி சம்பளம் வாங்கும் பூஜா ஹெக்டே! | கருத்த மச்சான் பாடலுக்கு மமிதா பைஜூ அசத்தல் நடனம் ! வைரலாகும் வீடியோ!! | கிண்டல் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த சூரி | 'பராசக்தி' பாடல்கள் விரைவில்… ஜிவி பிரகாஷ் தகவல் | கதை நாயகியான கீதா கைலாசம் | திரவுபதி 2: ரிச்சர்ட்சின் 'வீர சிம்ஹா கடவராயன்' தோற்றம் வெளியீடு |
தமிழ் சினிமாவில் இன்றைக்கு முன்னணியில் பல நடிகர்கள் கஷ்டப்பட்டு மேலே வந்தவர்கள்தான். லைட் பாய் ஆக, டிவி நிகழ்ச்சிகளில் சிறிய வேடங்களில் நடித்தவராக, சினிமாவில் ஓரிரு காட்சிகளில் தலை காட்டியவராக நடித்து பின் நகைச்சுவை நடிகராக உயர்ந்து, இன்றைக்கு நாயகனாகவும் உயர்ந்திருப்பவர் நடிகர் சூரி.
மதுரை அருகே உள்ள ராஜாக்கூர் என்ற ஊரில் அவர்களது குடும்பத்தினர் அனைவரும் கூட்டுக் குடும்பமாக இருக்கிறார்கள். தங்களது குடும்பத்தினருடன் தீபாவளி கொண்டாடும் வீடியோ ஒன்றை சூரி இரண்டு தினங்களுக்கு முன்பு எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருந்தார்.
அதற்கு ரசிகர் ஒருவர், “திண்ணைல கிடந்தவனுக்கு திட்டுக்குன்னு வந்துச்சாம் வாழ்க்கை.” என்று கிண்டலடித்து கமெண்ட் போட்டிருந்தார். அந்த நபருக்கு சரியான விதத்தில் பதிலடி கொடுத்துள்ளார் சூரி.
“திண்ணையில் இல்லை நண்பா, பல நாட்களும் இரவுகளும் ரோட்டில்தான் இருந்தவன் நான்… அந்த பாதைகள் தான் எனக்கு வாழ்க்கையின் உண்மையும் மதிப்பையும் கற்றுத் தந்தது. நீயும் உன் வளர்ச்சியில் நம்பிக்கை வைத்து முன்னேறினா, வெற்றி நிச்சயம் உன்னைத் தேடி வரும்,” என பதிலளித்துள்ளார்.
உழைப்பால் உயர்ந்த சிலரது உயர்வைப் பார்த்து பொறாமைப்படும் கூட்டம் இன்னும் இருக்கத்தான் செய்கிறது.