ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

தமிழ் சினிமாவில் இன்றைக்கு முன்னணியில் பல நடிகர்கள் கஷ்டப்பட்டு மேலே வந்தவர்கள்தான். லைட் பாய் ஆக, டிவி நிகழ்ச்சிகளில் சிறிய வேடங்களில் நடித்தவராக, சினிமாவில் ஓரிரு காட்சிகளில் தலை காட்டியவராக நடித்து பின் நகைச்சுவை நடிகராக உயர்ந்து, இன்றைக்கு நாயகனாகவும் உயர்ந்திருப்பவர் நடிகர் சூரி.
மதுரை அருகே உள்ள ராஜாக்கூர் என்ற ஊரில் அவர்களது குடும்பத்தினர் அனைவரும் கூட்டுக் குடும்பமாக இருக்கிறார்கள். தங்களது குடும்பத்தினருடன் தீபாவளி கொண்டாடும் வீடியோ ஒன்றை சூரி இரண்டு தினங்களுக்கு முன்பு எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருந்தார்.
அதற்கு ரசிகர் ஒருவர், “திண்ணைல கிடந்தவனுக்கு திட்டுக்குன்னு வந்துச்சாம் வாழ்க்கை.” என்று கிண்டலடித்து கமெண்ட் போட்டிருந்தார். அந்த நபருக்கு சரியான விதத்தில் பதிலடி கொடுத்துள்ளார் சூரி.
“திண்ணையில் இல்லை நண்பா, பல நாட்களும் இரவுகளும் ரோட்டில்தான் இருந்தவன் நான்… அந்த பாதைகள் தான் எனக்கு வாழ்க்கையின் உண்மையும் மதிப்பையும் கற்றுத் தந்தது. நீயும் உன் வளர்ச்சியில் நம்பிக்கை வைத்து முன்னேறினா, வெற்றி நிச்சயம் உன்னைத் தேடி வரும்,” என பதிலளித்துள்ளார்.
உழைப்பால் உயர்ந்த சிலரது உயர்வைப் பார்த்து பொறாமைப்படும் கூட்டம் இன்னும் இருக்கத்தான் செய்கிறது.