கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 | டில்லியில் ஹேமமாலினியின் பாதங்களைத் தொட்டு வணங்கிய பாலகிருஷ்ணா | ‛ப்ரோ 2' ஸ்கிரிப்ட் ரெடி : பவன் கல்யாணின் கிரீன் சிக்னலுக்கு காத்திருக்கும் சமுத்திரக்கனி | சாய்பல்லவி நடித்த முதல் ஹிந்தி பாடலுக்கு வரவேற்பு | துரந்தர் 2 : படம் பார்க்காமல் பாராட்டிய ஆமிர்கான் |

நடிகர் விஜயின் கரூர் பிரச்சாரத்தில் 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதையடுத்து அந்த சம்பவம் தொடர்பாக சிலர் விஜய்யை விமர்சனம் செய்திருந்தார்கள்.
நடிகர் சூரியும் விஜய்யை விமர்சனம் செய்தது போன்று ஒரு செய்தி சோசியல் மீடியாவில் வைரலாகி வந்தது. இந்த நிலையில் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார் சூரி. அதில், 'தம்பி தவறான தகவலை பரப்புவது இந்த சமூகத்துக்கு எப்போதுமே தீமையே தரும். அதனால் நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் நிதானத்தையும் முதிர்ச்சியும் காட்ட வேண்டும். நல்ல மாற்றங்களை பெறுவதற்கு இந்த சமூகம் தகுதியானது. அதனால் அன்பையும் நன்மையையும் பரப்புவதில் உங்களது சிறந்ததை வெளிப்படுத்துங்கள். அதனால் நம்முடைய பணிகளில் எப்போதும் முழு கவனத்தை செலுத்துவோம்' என்று அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஒரு பதிவு போட்டு உள்ளார் நடிகர் சூரி.