நிவேதா பெத்துராஜ் திருமணம் ரத்தா...? | மாப்பிள்ளை அவர்தான் ஆனால்.. என்கிற பாணியில் நடிகை வழக்கில் கருத்து தெரிவிக்கும் மலையாள நட்சத்திரங்கள் | பெப்காவில் திலீப்பை சேர்க்க முயற்சி ; ராஜினாமா செய்த பெண் டப்பிங் கலைஞர் | தக்க சமயத்தில் உதவி செய்வதில் சூர்யா எம்ஜிஆர் மாதிரி : விநியோகஸ்தர் சக்திவேலன் | அமெரிக்காவில் சிவகார்த்திகேயன், வெங்கட்பிரபு | பிக்பாஸ் ஜூலிக்கு டும் டும் : நிச்சயதார்த்தம் நடந்தது | பெங்களூருவிலும் மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறக்கும் மகேஷ் பாபு | படப்பிடிப்பு தொடங்கும் முன் ஓடிய ஹீரோயின் : டக்கென கமிட்டான மெகாலி | படையப்பா ரீ ரிலீஸ் : ரம்யா கிருஷ்ணன் மகிழ்ச்சி | உண்மை கதையில் விக்ரம் பிரபு |

நடிகர் விஜயின் கரூர் பிரச்சாரத்தில் 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதையடுத்து அந்த சம்பவம் தொடர்பாக சிலர் விஜய்யை விமர்சனம் செய்திருந்தார்கள்.
நடிகர் சூரியும் விஜய்யை விமர்சனம் செய்தது போன்று ஒரு செய்தி சோசியல் மீடியாவில் வைரலாகி வந்தது. இந்த நிலையில் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார் சூரி. அதில், 'தம்பி தவறான தகவலை பரப்புவது இந்த சமூகத்துக்கு எப்போதுமே தீமையே தரும். அதனால் நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் நிதானத்தையும் முதிர்ச்சியும் காட்ட வேண்டும். நல்ல மாற்றங்களை பெறுவதற்கு இந்த சமூகம் தகுதியானது. அதனால் அன்பையும் நன்மையையும் பரப்புவதில் உங்களது சிறந்ததை வெளிப்படுத்துங்கள். அதனால் நம்முடைய பணிகளில் எப்போதும் முழு கவனத்தை செலுத்துவோம்' என்று அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஒரு பதிவு போட்டு உள்ளார் நடிகர் சூரி.