நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

விக்ரம் பிரபு கேரியரில் மிக முக்கியமான படமாக இருந்தது 'டாணாக்காரன்'. போலீஸ் பயிற்சி மையத்தில் நடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் தமிழ் இந்த படத்தை இயக்கினார். இயக்குனர் தமிழ் காவல்துறையில் பணியாற்றியவர் என்பதால் தான் சந்தித்த உண்மை சம்பவம் ஒன்றை 'சிறை' என்கிற பெயரில் எழுதியுள்ளார். அந்தக் கதை 'சிறை' என்ற பெயரிலேயே திரைப்படமாக தயாராகி உள்ளது.
இதனை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில், தயாரிப்பாளர் லலித் குமார் தயாரிக்கிறார். விக்ரம் பிரபு, எல். கே.அக்ஷய் குமார் நடிக்கிறார்கள். நாயகியாக அனந்தா நடிக்கிறார். வெற்றிமாறனின் உதவியாளர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கி உள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். வருகிற 25ம் தேதி படம் வெளியாகிறது.
படம் குறித்து இயக்குனர் சுரேஷ் ராஜகுமாரி கூறும் போது "முற்றிலும் மாறுபட்ட களத்தில் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள படம். இயக்குநர் தமிழ், தான் சந்தித்த உண்மையான நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து இந்த கதையை எழுதியுள்ளார். முற்றிலும் புதிய களத்தில் புதிய கதையாக இந்த படம் அமையும். ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தையும் கொடுக்கும்" என்றார்.