ஆஸ்கர் விருது - நாமினேஷன் பட்டியலில் இடம் பெறாத 'ஹோம்பவுண்ட்' | ‛திரெளபதி 2' படத்தை பாடமாக வைக்க வேண்டும்: சொல்கிறார் எச்.ராஜா | 'சங்கராந்திகி வஸ்துனம்' ஹிந்தி ரீமேக்கில் மீனாட்சி சவுத்ரி வேடத்தில் ராஷி கண்ணா! | 'பார்டர் 2' படக்குழு வெளியிட்ட 'தி பிரேவ்ஸ் ஆப் த சாயில்' டிரைலர் | மிகவும் உடல் மெலிந்த திரிஷா! வைரலாகும் இன்ஸ்டாகிராம் புகைப்படம்!! | குடும்பங்கள் கொண்டாடிய 'சிறை' முதல் ஆக்சனில் மிரட்டிய 'ரெட்ட தல' வரை இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பாடகி எஸ் ஜானகி மகன் முரளி மறைவு | சில நடிகைகளுக்கு நடிக்க தெரியவில்லை : யாரை சொல்கிறார் மாளவிகா மோகனன் | பல மொழி கற்பது : ஆஷிகா ரங்கநாத் பெருமிதம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாக்யராஜால் கலையுலகில் கவிபாட வந்த கவிதை நாயகன் |

விக்ரம் பிரபு கேரியரில் மிக முக்கியமான படமாக இருந்தது 'டாணாக்காரன்'. போலீஸ் பயிற்சி மையத்தில் நடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் தமிழ் இந்த படத்தை இயக்கினார். இயக்குனர் தமிழ் காவல்துறையில் பணியாற்றியவர் என்பதால் தான் சந்தித்த உண்மை சம்பவம் ஒன்றை 'சிறை' என்கிற பெயரில் எழுதியுள்ளார். அந்தக் கதை 'சிறை' என்ற பெயரிலேயே திரைப்படமாக தயாராகி உள்ளது.
இதனை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில், தயாரிப்பாளர் லலித் குமார் தயாரிக்கிறார். விக்ரம் பிரபு, எல். கே.அக்ஷய் குமார் நடிக்கிறார்கள். நாயகியாக அனந்தா நடிக்கிறார். வெற்றிமாறனின் உதவியாளர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கி உள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். வருகிற 25ம் தேதி படம் வெளியாகிறது.
படம் குறித்து இயக்குனர் சுரேஷ் ராஜகுமாரி கூறும் போது "முற்றிலும் மாறுபட்ட களத்தில் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள படம். இயக்குநர் தமிழ், தான் சந்தித்த உண்மையான நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து இந்த கதையை எழுதியுள்ளார். முற்றிலும் புதிய களத்தில் புதிய கதையாக இந்த படம் அமையும். ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தையும் கொடுக்கும்" என்றார்.




