''முன்பு காட்டியதை விட ஷூட்டிங்கில் சிறிய உடை கொடுப்பார்கள்'' : மும்தாஜ் பகிர்ந்த வேதனை அனுபவங்கள் | தனுஷ் 55வது பட வெளியீடு எப்போது தெரியுமா? | 'புருஷன்' படத்தின் படப்பிடிப்பில் சுந்தர்.சி தீவிரம்! | துருவ் விக்ரமிற்கு ஜோடியாகும் ஜான்வி கபூர்! | மீண்டும் தெலுங்கு நடிகரை வைத்து படம் இயக்கும் லிங்குசாமி! | ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளிப்போன அஜித் படம்! | ரஜினி 173வது படத்தின் முக்கிய அப்டேட்! | 63 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'பெத்தி' டிரைலர் | இந்த வாரம், புதிய படங்கள் இல்லையா ? | 'சேயோன்' படப்பிடிப்பு தொடங்கியது: மதுரை விழாவில் கமல் பங்கேற்பு |

ஹிந்தியில் வெளியான பிங்க், தற்போது தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் 'வக்கீல் சாப்' என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு சமீபத்தில் வெளியாகியுள்ளது. இரண்டு வருடங்களுக்கு மேலாக படம் எதிலும் நடிக்காமல் இருந்த பவன் கல்யாண் இதில் மாஸ் ஆன ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் என்று படத்திற்கு ரசிகர்களிடம் பலத்த வரவேற்பும் கிடைத்துள்ளது.
ஆனால் இந்த மகிழ்ச்சியை அனைவருடனும் சேர்ந்து கொண்டாட முடியாதபடி தற்போது தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் பவன் கல்யாண் ஆம்.. பவன் கல்யாணின் உதவியாளர் மற்றும் பாதுகாவலர் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்தே பவன் கல்யாண், தானாகவே தற்போது தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
இதை உறுதி செய்து அவரது ஜனசேனா கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியில் உள்ள பலருக்கும் அடுத்தடுத்து கொரோனா தொற்று பரவி வருகிறது. அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பவன் கல்யாண் தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார் என கூறியுள்ளனர்.




