ஜனநாயகன் பட வழக்கில் ஜன., 27ல் தீர்ப்பு | அஜித் 64ல் நிறைய சர்ப்ரைஸ் இருக்கு : ஆதிக் ரவிச்சந்திரன் | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கும் பிரீத்தி முகுந்தன் | மணிகண்டன் படத்தை இயக்கும் தேசிங்கு பெரியசாமி | விஜய்க்கு தம்பியாக தனுஷ் : இயக்குனர் ஏ.வெங்கடேஷ் சொன்ன தகவல் | கவின் படத்தில் இணைந்த சிம்ரன் | கேரள தேர்தலில் போட்டியிடுகிறேனா : பாவனா பதில் | 32 வருடங்களுக்குப் பிறகு 4வது முறையாக அடூர் கோபாலகிருஷ்ணன் உடன் இணையும் மம்முட்டி | மலையாளத்தில் காளிதாஸ் ஜெயராமின் புதிய படப்பிடிப்பு துவங்கியது | 84 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழக்கு : தனுஷ் பட இயக்குனர் விளக்கம் |

ஹிந்தியில் வெளியான பிங்க், தற்போது தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் 'வக்கீல் சாப்' என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு சமீபத்தில் வெளியாகியுள்ளது. இரண்டு வருடங்களுக்கு மேலாக படம் எதிலும் நடிக்காமல் இருந்த பவன் கல்யாண் இதில் மாஸ் ஆன ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் என்று படத்திற்கு ரசிகர்களிடம் பலத்த வரவேற்பும் கிடைத்துள்ளது.
ஆனால் இந்த மகிழ்ச்சியை அனைவருடனும் சேர்ந்து கொண்டாட முடியாதபடி தற்போது தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் பவன் கல்யாண் ஆம்.. பவன் கல்யாணின் உதவியாளர் மற்றும் பாதுகாவலர் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்தே பவன் கல்யாண், தானாகவே தற்போது தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
இதை உறுதி செய்து அவரது ஜனசேனா கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியில் உள்ள பலருக்கும் அடுத்தடுத்து கொரோனா தொற்று பரவி வருகிறது. அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பவன் கல்யாண் தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார் என கூறியுள்ளனர்.




