பராசக்தி முதல் பாடலான 'அடி அலையே' வெளியீடு | தயாரிப்பாளர்களுக்கு கூட பாடல் உரிமையை வழங்கியது இல்லை: இளையராஜா | 'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு : நவ., 8ல் முதல் பாடல் | சத்ய சாய் பாபாவின் மகிமையை சொல்லும் ‛அனந்தா' : நவ., 23ல் வெளியீடு | கிஸ் முதல் நெட்வொர்க் வரை... இந்த வாரா ஓடிடி ரிலீஸ்...! | ''பீரியட் படம் பண்ணுவது தனி அனுபவம்... டைம் மிஷின் மூலம் அந்த காலம் செல்வது மாதிரி'': துல்கர் சல்மான் | ரோஜா 'கம்பேக்': 'லெனின் பாண்டியன்' படத்தில் நடிக்கிறார் | மணிரத்னம் படம் : சிம்புவிற்கு பதில் விஜய் சேதுபதி | ரஜினிகாந்த்தை 'தலைவர்' எனக் குறிப்பிட்ட கமல்ஹாசன் | ஹரிஷ் கல்யாண் அடுத்து நடிக்கும் இரண்டு படங்கள் |

ஹிந்தியில் வெளியான பிங்க், தற்போது தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் 'வக்கீல் சாப்' என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு சமீபத்தில் வெளியாகியுள்ளது. இரண்டு வருடங்களுக்கு மேலாக படம் எதிலும் நடிக்காமல் இருந்த பவன் கல்யாண் இதில் மாஸ் ஆன ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் என்று படத்திற்கு ரசிகர்களிடம் பலத்த வரவேற்பும் கிடைத்துள்ளது.
ஆனால் இந்த மகிழ்ச்சியை அனைவருடனும் சேர்ந்து கொண்டாட முடியாதபடி தற்போது தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் பவன் கல்யாண் ஆம்.. பவன் கல்யாணின் உதவியாளர் மற்றும் பாதுகாவலர் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்தே பவன் கல்யாண், தானாகவே தற்போது தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
இதை உறுதி செய்து அவரது ஜனசேனா கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியில் உள்ள பலருக்கும் அடுத்தடுத்து கொரோனா தொற்று பரவி வருகிறது. அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பவன் கல்யாண் தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார் என கூறியுள்ளனர்.