அன்பானவரை இழந்து வாடுகிறேன் ; தவறான தகவலை பரப்பாதீங்க - மீனா | அவதார் 2 : கேட் வின்ஸ்லெட் லுக் அவுட் | வின்னர் 2 உருவாகிறது | 20 ஆண்டுகள் ; மாறாத மாதவன் - சிம்ரன் நெகிழ்ச்சி | அதே படம்... அப்பா இசையமைத்த மற்றொரு ஹிட் பாடலை பயன்படுத்திய யுவன் | கமலையும், மம்முட்டியும் இணைக்கும் விஸ்வரூபம் எடிட்டர் | திலீப்பின் பறக்கும் பப்பன் படத்துக்கு இசையமைக்கும் அனிருத் ? | எம்ஜிஆர் பட கதை... ரஜினியின் டைட்டில் ; அசத்தும் நயன்தாரா பட இயக்குனர் | நான் வில்லன் இல்லை ; கடுவா ரகசியம் உடைத்த விவேக் ஓபராய் | குஷ்பு தொடரில் புதிய ஹீரோ |
ஹிந்தியில் வெளியான பிங்க், தற்போது தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் 'வக்கீல் சாப்' என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு சமீபத்தில் வெளியாகியுள்ளது. இரண்டு வருடங்களுக்கு மேலாக படம் எதிலும் நடிக்காமல் இருந்த பவன் கல்யாண் இதில் மாஸ் ஆன ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் என்று படத்திற்கு ரசிகர்களிடம் பலத்த வரவேற்பும் கிடைத்துள்ளது.
ஆனால் இந்த மகிழ்ச்சியை அனைவருடனும் சேர்ந்து கொண்டாட முடியாதபடி தற்போது தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் பவன் கல்யாண் ஆம்.. பவன் கல்யாணின் உதவியாளர் மற்றும் பாதுகாவலர் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்தே பவன் கல்யாண், தானாகவே தற்போது தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
இதை உறுதி செய்து அவரது ஜனசேனா கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியில் உள்ள பலருக்கும் அடுத்தடுத்து கொரோனா தொற்று பரவி வருகிறது. அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பவன் கல்யாண் தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார் என கூறியுள்ளனர்.