சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' பட டீசர் நாளை மறுநாள் ரிலீஸ் | பேச்சுத்துணைக்காக சம்பளம் கொடுத்து சிங்கம்புலியை மலேசியா அழைத்துச் சென்ற அஜித் | மம்முட்டிக்கு ஒரு நியாயம், சாதாரண நடிகருக்கு ஒரு நியாயமா ? : முதல்வர் மீது நடிகர் குற்றச்சாட்டு | லோகேஷ் கனகராஜ் பிறந்தநாளில் வெளியான டிசி படத்தின் புதிய போஸ்டர் | ராஷ்மிகாவின் ஹாக்டெய்ல் 2 படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது | 'ப்ரோ கிளப்' ஆக மாறும் 'ப்ரோ கோட்' ? | சிங்கப்பூர் சுற்றுலாவில் சிவகார்த்திகேயன் | நடிகர்களுக்கு, ஓடிடிக்கு கட்டுப்பாடு : சென்னை கூட்டு கூட்டத்தில் முக்கியமான முடிவு | 'காஞ்சனா' ரீரிலீஸ் : முதல் நாளில் 3 கோடி வசூல் | ஒரு படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க 22 நாட்கள் |

'திருச்சிற்றம்பலம்' படத்தில் நடித்து தேசிய விருது பெற்ற நித்யா மேனன், அதையடுத்து 'இட்லி கடை, தலைவன் தலைவி' போன்ற படங்களில் நடித்தார். இந்த நிலையில் தற்போது அவர், கேயுரி புரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் ஒரு பட நிறுவனம் தொடங்கியுள்ளார். அது குறித்த வீடியோவுடன் ஒரு பதிவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நித்யா மேனன்.
அந்த பதிவில், 'என்னைப் பொறுத்தவரை திரைப்படங்களை உருவாக்குவது என்பது பெரும் கதைகளை சொல்வதை விட மேலானது. அது உண்மையான மக்களை ஆழமான வட்டத்தில் சென்றடைய முடிவது பற்றியது. அறிவை விட ஆழமான இடம். சிந்தனைக்கு மேலே ஒரு இடம். பகுத்தறிவுக்கு மேலே ஒரு இடம். ஒரு மாற்றத்தை தூண்டுவது. நான் படைப்பு செயல்பாட்டில் மூழ்கியிருக்கும்போது எனக்குள் கவனிக்கும் மற்றவர்களுக்கும் அமைதியாக அலை அலையாக வரும் மாற்றங்களை உருவாக்குவது.
நாம் முழுமையாக பெயரிட முடியாத வழிகளில் முதலில் புலப்படாமல், ஆனால் மீள முடியாமல் அதிசயம். நான் நடிக்க தொடங்கிய முதல் நாளில் இருந்து அது எனது செயல்முறையாகவும் நோக்கமாகவும் இருந்தாலும், நான் இப்போது படங்களை தயாரிக்கும்போது அது நோக்கமாகவே இருக்கும். இந்த கேயுரி புரொடக்சன்சை நான் உங்களுக்கு வழங்குகிறேன்,' என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார் நித்யா மேனன்.