இந்த வார ஓடிடியில் வரிசைக்கட்டும் க்ரைம் த்ரில்லர் படங்கள்....! | நானி படத்தில் இணைந்த பிரித்விராஜ் | ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் ‛டெக்ஸ்லா' : யுவன் இசை | நடிகையுடன் உறவு: விவாகரத்து கேட்டு நடிகர் விஜய் மனைவி சங்கீதா மனு | மோடி, அமித்ஷாவிடம் வாழ்த்து பெற்ற விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா | சினிமாவில் அரசியல் பேசுவது தவறில்லை: சிவகார்த்திகேயன் | மலையாள இயக்குனர் டைரக்ஷனில் நடிக்கும் விக்ரம் | தேர்தல் நெருங்கும் வேளையில் முதல்வரை நேர்காணல் செய்த மோகன்லால் | ரசிகர்களை குஷிப்படுத்திய பேட்ரியாட் செகண்ட் லுக் போஸ்டர் | மோகன்லாலின் முதல் படத்தில் இணைந்து நடித்த நடிகர் காலமானார் |

'திருச்சிற்றம்பலம்' படத்தில் நடித்து தேசிய விருது பெற்ற நித்யா மேனன், அதையடுத்து 'இட்லி கடை, தலைவன் தலைவி' போன்ற படங்களில் நடித்தார். இந்த நிலையில் தற்போது அவர், கேயுரி புரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் ஒரு பட நிறுவனம் தொடங்கியுள்ளார். அது குறித்த வீடியோவுடன் ஒரு பதிவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நித்யா மேனன்.
அந்த பதிவில், 'என்னைப் பொறுத்தவரை திரைப்படங்களை உருவாக்குவது என்பது பெரும் கதைகளை சொல்வதை விட மேலானது. அது உண்மையான மக்களை ஆழமான வட்டத்தில் சென்றடைய முடிவது பற்றியது. அறிவை விட ஆழமான இடம். சிந்தனைக்கு மேலே ஒரு இடம். பகுத்தறிவுக்கு மேலே ஒரு இடம். ஒரு மாற்றத்தை தூண்டுவது. நான் படைப்பு செயல்பாட்டில் மூழ்கியிருக்கும்போது எனக்குள் கவனிக்கும் மற்றவர்களுக்கும் அமைதியாக அலை அலையாக வரும் மாற்றங்களை உருவாக்குவது.
நாம் முழுமையாக பெயரிட முடியாத வழிகளில் முதலில் புலப்படாமல், ஆனால் மீள முடியாமல் அதிசயம். நான் நடிக்க தொடங்கிய முதல் நாளில் இருந்து அது எனது செயல்முறையாகவும் நோக்கமாகவும் இருந்தாலும், நான் இப்போது படங்களை தயாரிக்கும்போது அது நோக்கமாகவே இருக்கும். இந்த கேயுரி புரொடக்சன்சை நான் உங்களுக்கு வழங்குகிறேன்,' என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார் நித்யா மேனன்.




