பிளாஷ்பேக் : மூன்று முதல்வர்களை இயக்கியவர் : கே.சங்கர் நூற்றாண்டு நினைவு | அடுத்த வாரம் 'கருப்பு' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு? | கதாநாயகியும் பாடலும் இல்லாத படத்தில் ஜெய் | 'ஸ்லம்டாக் மில்லியனர்' மூலம் இப்போதும் ராயல்டி பெறும் அனில் கபூர் | ஐட்டம் டான்ஸ் ஆடி இருப்பது நிகிலா விமல் அல்ல வேதிகா ; உடைத்த சஸ்பென்ஸ் | சிம்பு படத்தில் நெல்சனுக்கு பதிலாக அஸ்வத் மாரிமுத்து | 69 வயதில் சூப்பர் ஹீரோவாக நடிக்கும் ஜாக்கி ஷெராப் | 18 ஆண்டுகளுக்குபின் “தாம் தூம்” ஏப்ரல் 10ம் தேதி ரீ-ரிலீஸ் | 'காலா' படத்தில் நடித்ததற்காக ஹிந்தி நடிகரை கடிந்துகொண்ட நானா படேகர் | சினிமா அற்புதமான தொழில்: விஜய்சேதுபதி அனுபவ பேச்சு |

'திருச்சிற்றம்பலம்' படத்தில் நடித்து தேசிய விருது பெற்ற நித்யா மேனன், அதையடுத்து 'இட்லி கடை, தலைவன் தலைவி' போன்ற படங்களில் நடித்தார். இந்த நிலையில் தற்போது அவர், கேயுரி புரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் ஒரு பட நிறுவனம் தொடங்கியுள்ளார். அது குறித்த வீடியோவுடன் ஒரு பதிவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நித்யா மேனன்.
அந்த பதிவில், 'என்னைப் பொறுத்தவரை திரைப்படங்களை உருவாக்குவது என்பது பெரும் கதைகளை சொல்வதை விட மேலானது. அது உண்மையான மக்களை ஆழமான வட்டத்தில் சென்றடைய முடிவது பற்றியது. அறிவை விட ஆழமான இடம். சிந்தனைக்கு மேலே ஒரு இடம். பகுத்தறிவுக்கு மேலே ஒரு இடம். ஒரு மாற்றத்தை தூண்டுவது. நான் படைப்பு செயல்பாட்டில் மூழ்கியிருக்கும்போது எனக்குள் கவனிக்கும் மற்றவர்களுக்கும் அமைதியாக அலை அலையாக வரும் மாற்றங்களை உருவாக்குவது.
நாம் முழுமையாக பெயரிட முடியாத வழிகளில் முதலில் புலப்படாமல், ஆனால் மீள முடியாமல் அதிசயம். நான் நடிக்க தொடங்கிய முதல் நாளில் இருந்து அது எனது செயல்முறையாகவும் நோக்கமாகவும் இருந்தாலும், நான் இப்போது படங்களை தயாரிக்கும்போது அது நோக்கமாகவே இருக்கும். இந்த கேயுரி புரொடக்சன்சை நான் உங்களுக்கு வழங்குகிறேன்,' என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார் நித்யா மேனன்.