ஆஸ்கருக்கு செல்லும் 2 தமிழ் படங்கள் | 8 வருடங்களுக்கு பிறகு தமிழ் திரையில் ருஹானி சர்மா | தேர்தல் கமிஷன் தூதர் பதவியில் இருந்து நீது சந்திரா நீக்கம் | பிளாஷ்பேக்: பாலச்சந்திரமேனன் இயக்கிய தமிழ் படம் | பிளாஷ்பேக்: நிலவொளியில் ஒளிப்பதிவு செய்த முதல் ஒளிப்பதிவாளர் | ‛வாரணாசி' படத்தில் நடிக்க 30 கோடி சம்பளம் வாங்கிய பிரியங்கா சோப்ரா! | பிளாஷ்பேக்: எம் ஜி ஆர், சிவாஜியை மீண்டும் ஒரு படத்தில் நடிக்க வைக்க விரும்பிய ஏ வி எம் | திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் ஆளுங்கட்சி தலையீடு: தயாரிப்பாளர்கள் குமுறல் | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! |

தெலுங்கு திரையுலக தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில் ‛வாரிசு, மகரிஷி' போன்ற படங்களை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் ஹிந்தி நடிகர் அமீர்கான் நடிக்கவிருந்த படம் தற்போது ஒரு சில காரணங்களால் கைவிடப்பட்டுள்ளது என கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது. இதையடுத்து அமீர்கானுக்கு கூறிய அதே கதையில் தெலுங்கு நடிகர் மற்றும் துணை முதல்வர் பவன் கல்யாணை நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தையை தில் ராஜூ முன் எடுத்துள்ளார் என கூறப்பட்டது.
இந்த நிலையில் திடீர் திருப்பமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வம்சி, தில் ராஜூ இருவரும் மும்பையில் நடிகர் சல்மான் கானுடன் இந்த கதை குறித்து பேசியுள்ளனர். இந்த கதை பிடித்து போக சல்மான் கான் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் என பாலிவுட் வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.