தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

நலன் குமார்சாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் படம் ‛வா வாத்தியார்'. கதாநாயகியாக கிர்த்தி ஷெட்டி நடிக்கிறார். சத்யராஜ், ராஜ்கிரண், ஆனந்தராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு வா வாத்தியார் என ஏன் டைட்டில் வைக்கப்பட்டது என்கிற ஒரு சுவாரசிய தகவலை நடிகர் ஆனந்தராஜ் பகிர்ந்து கொண்டுள்ளார். மெட்ராஸ் மாபியா கம்பெனி படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள நடிகர் ஆனந்தராஜ் அந்த படத்தில் இசை வெளியீட்டு விழாவில் சமீபத்தில் பேசும்போது படத்தின் தயாரிப்பாளர் அண்ணாதுரை குறித்து பேசினார்.
அதாவது, “முன்னாள் முதல்வர் அண்ணாதுரை இறந்த தினத்தன்று பிறந்ததால் தான் இவருக்கு அண்ணாதுரை என்று பெயர் வைத்துள்ளார்கள். இதே போல தான் தற்போது நான் நடித்து வரும் வா வாத்தியார் படத்தில் கூட படத்தில் நாயகன் கார்த்தி, எம்ஜிஆர் மறைந்த சமயத்தில் பிறந்தவர். அதனை மையப்படுத்தி தான் அந்த கதையை உருவாக்கி இருக்கிறார்கள்” என்கிற தகவலை கூறினார்.
பொதுவாக திரையுலகில் எம்ஜிஆர் தான் வாத்தியார் என்று எல்லோரும் அழைப்பார்கள். ஆனந்தராஜ் சொன்ன தகவலின் படி அதனால் தான் படத்திற்கு வா வாத்தியார் என்று டைட்டில் வைத்துள்ளார்கள் என்பதை எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது.