நாகார்ஜுனா 100வது படத்தில் இணைந்த நடிகை சுஷ்மிதா பட்! | ‛வா வாத்தியார்' டைட்டிலின் பின்னணி ; ஆனந்தராஜ் சொன்ன தகவல் | தனுஷ் பட ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த மரியாதை | கவுதம் ராம் கார்த்திக்கின் ‛ரூட்' படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவு பெற்றது! | சத்ய சாய் பாபா படத்தை இயக்கும் சுரேஷ் கிருஷ்ணா! | 'பெத்தி' படத்திலிருந்து ஜான்வி கபூர் முதல் பார்வை வெளியானது! | ‛மேயாத மான்' ரத்னகுமார் படத்தை தயாரிக்கும் இயக்குனர்கள்! | வாரிசு பட இயக்குனரின் அடுத்த படத்தில் நடந்த ட்விஸ்ட்! | கமல் பிறந்தநாளில் ரஜினி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்! | டப்பிங்கில் இவ்வளவு விஷயங்களா? விளக்குகிறார் ஷ்யாம் குமார் |

நலன் குமார்சாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் படம் ‛வா வாத்தியார்'. கதாநாயகியாக கிர்த்தி ஷெட்டி நடிக்கிறார். சத்யராஜ், ராஜ்கிரண், ஆனந்தராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு வா வாத்தியார் என ஏன் டைட்டில் வைக்கப்பட்டது என்கிற ஒரு சுவாரசிய தகவலை நடிகர் ஆனந்தராஜ் பகிர்ந்து கொண்டுள்ளார். மெட்ராஸ் மாபியா கம்பெனி படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள நடிகர் ஆனந்தராஜ் அந்த படத்தில் இசை வெளியீட்டு விழாவில் சமீபத்தில் பேசும்போது படத்தின் தயாரிப்பாளர் அண்ணாதுரை குறித்து பேசினார்.
அதாவது, “முன்னாள் முதல்வர் அண்ணாதுரை இறந்த தினத்தன்று பிறந்ததால் தான் இவருக்கு அண்ணாதுரை என்று பெயர் வைத்துள்ளார்கள். இதே போல தான் தற்போது நான் நடித்து வரும் வா வாத்தியார் படத்தில் கூட படத்தில் நாயகன் கார்த்தி, எம்ஜிஆர் மறைந்த சமயத்தில் பிறந்தவர். அதனை மையப்படுத்தி தான் அந்த கதையை உருவாக்கி இருக்கிறார்கள்” என்கிற தகவலை கூறினார்.
பொதுவாக திரையுலகில் எம்ஜிஆர் தான் வாத்தியார் என்று எல்லோரும் அழைப்பார்கள். ஆனந்தராஜ் சொன்ன தகவலின் படி அதனால் தான் படத்திற்கு வா வாத்தியார் என்று டைட்டில் வைத்துள்ளார்கள் என்பதை எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது.