'திரெளபதி 2' படத்தில் பாடியதற்காக மன்னிப்பு கேட்ட சின்மயி | மஞ்சு வாரியரிடம் கமல் வைத்த கோரிக்கை | நகைச்சுவைக்கு நேரமும் இயல்பான வெளிப்பாடும் அவசியம் : ஷ்ரேயா ஷர்மா | ராம்சரண் படத்தின் சண்டைக் காட்சியை படமாக்கும் பாலிவுட் ஹீரோவின் தந்தை | என் மகனை திரையுலகிலிருந்து ஒதுக்க சதி ; பிரித்விராஜின் தாயார் பகீர் குற்றச்சாட்டு | 500 நடன கலைஞர்களுடன் நடைபெற்று வரும் சிரஞ்சீவி, வெங்கடேஷ் பாடல் படப்பிடிப்பு | பாட்டிலை தலையில் உடைத்து போஸ்டருக்கு ரத்த திலகம் இட்ட மகேஷ்பாபு ரசிகர் | ரியோ ராஜ் நடிக்கும் 'ராம் இன் லீலா' | இயக்குனர் ராஜ் நிடிமொருவை 2வது திருமணம் செய்தார் சமந்தா | நடிகை கனகா தந்தையும் இயக்குனருமான தேவதாஸ் காலமானார் |

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை நயன்தாரா. ஒரு படத்திற்கு 10 கோடி வரை சம்பளம் பெறுகிறார். பாலிவுட்டிலும் நடிக்கத் தொடங்கி உள்ளார். இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர். சினிமாவை தாண்டி தொழில் அதிபராகவும் உயர்ந்து இருக்கிறார். அதோடு சொந்தமாக படங்களும் தயாரித்து வருகிறார்.
நயன்தாராவுக்கு கேரளாவில் பூர்வீக வீடு இருந்தாலும் சினிமாவில் நடிக்க வசதியாக சென்னை எழும்பூரில் உள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அதோடு ரஜினிகாந்த், தனுஷ், சசிகலா உள்ளிட்ட பிரபலங்கள் வசிக்கும் போயஸ் கார்டனில் இடம் வாங்கி பிரமாண்ட வீடு கட்டி வருவதாக ஏற்கனவே தகவல் பரவியது. இந்த வீடு 100 கோடி ரூபாய் செலவில் கட்டப்படுவதாகவும் தகவல்கள் வெளியானது.

தற்போது நயன்தாரா அந்த வீட்டின் முன் தான் நிற்பது போலவும், கதவை திறந்து கொண்டு உள்ளே செல்வது போலவும் படங்களை தனது இன்ஸ்ட்ராகிராமில் வெளியிட்டு “நாம் நல்ல தருணங்களில் இருக்கிறோம். அதற்கு மேல் எதுவுமில்லை” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த புதிய வீட்டில் நயன்தாரா சத்தமே இல்லாமல் குடியேறி விட்டார் என்றும், முழுமையாக கட்டிமுடிக்கப்பட்ட வீட்டை பார்வையிட்டுள்ளார் என்றும் இருவித தகவல்கள் வெளியாகி உள்ளது.




