Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

சல்மான்கானை கொல்ல சிறையில் நடந்த சதி: குற்றப்பத்திரிகையில் தகவல்

03 ஜூலை, 2024 - 03:03 IST
எழுத்தின் அளவு:
Conspiracy-to-kill-Salman-Khan-in-jail:-Details-in-chargesheet

பாலிவுட் நடிகர் சல்மான்கான் 50 வயதை கடந்தும் இன்னும் திருமணம் செய்யவில்லை. தனக்கென தனி பாதுகாப்பு படை வைத்திருக்கிறார். பண்ணை வீடுகளில் ரகசிய வாழ்க்கை வாழ்கிறார். மும்பை அன்டர் கிரவுண்ட் தாதாக்களுடனும் அவருக்கு தொடர்பு உண்டு. இப்படியான பல தகவல்கள் உண்டு.

இந்த நிலையில் மும்பை பாந்திராவில் உள்ள அவரது வீட்டின் மீது கடந்த ஏப்ரல் மாதம் 14ம் தேதி 2 பேர் துப்பாக்கியால் சுட்டனர். இந்த சம்பவத்தில் விக்கி குப்தா, சாகர் பால் என்ற இரண்டு ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களுக்கு துப்பாக்கி வழங்கியதாக பஞ்சாப்பை சேர்ந்த சோனு பிஸ்னோய், அனுஜ் தாபனை கைது செய்து இருந்தனர். இவர்களில் அனுஜ் தாபன் போலீஸ் லாக்-அப்பில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த துப்பாக்கி சூடு தொடர்பாக சிறையில் இருக்கும் தாதா லாரன்ஸ் பிஷ்னோய், அவரது தம்பி அன்மோல் பிஷ்னோய் உள்பட 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய தனஞ்செய் தாப்சிங், கவுதம் பாட்டியா, வாப்சி கான், ரிஸ்வான் கான், தீபக் ஹவாசிங் ஆகிய 5 பேரை கைது செய்தனர். இவர்கள் 5 பேரும் தாதா லாரன்ஸ் பிஷ்னோய், அன்மோல் பிஷ்னோயிடம் தொடர்பில் இருந்ததாகவும், பன்வெலில் உள்ள சல்மான்கானின் பண்ணை வீட்டை வேவு பார்த்ததாகவும் தங்கள் வாக்குமூலத்தில் கூறி இருந்தனர்.

இந்தநிலையில் இந்த வழக்கில் பன்வெல் போலீசார் 350 பக்க குற்றப்பத்திரிகையை கோர்ட்டில் தாக்கல் செய்து உள்ளனர். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

சல்மான்கான் மீது தாக்குதல் நடத்த சிறையில் இருந்தபடி தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கூலிப்படையினரான தனது கும்பலை சேர்ந்தவர்களுக்கு 25 லட்சம் கொடுத்து உள்ளார். தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் படப்பிடிப்பு நடைபெறும் இடங்களில் சல்மான்கான் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்தனர். தாக்குதலுக்கு ஏ.கே.47 துப்பாக்கி போன்ற ஆயுதங்களை பயன்படுத்த திட்டமிட்டு இருந்தனர். ஆயுதங்களை பாகிஸ்தானில் இருந்து வாங்க முயற்சி செய்து உள்ளனர்.

சல்மான்கான் மீது 18 வயதுக்கு குறைந்த மைனர் வாலிபர்களை கொண்டு தாக்குதல் நடத்தவும் தாதா கோல்டி பிரார் அன்மோல் பிஷ்னோய், ரோகித் கோதராவை அறிவுறுத்தி உள்ளார். சல்மான்கான் மீது தாக்குதல் நடத்திவிட்டு அந்த கும்பல் கன்னியாகுமரி வழியாக இலங்கைக்கு தப்பிச் செல்லவும், அங்கு இருந்து வேறு நாடுகளுக்கு செல்லவும் திட்டமிட்டு இருந்தனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. இது பாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மிர்சாபூர் ரசிகர்கள் மாஸ் மற்றும் கிளாஸ் ஆனவர்கள் : பங்கஜ் திரிபாதி பெருமிதம்மிர்சாபூர் ரசிகர்கள் மாஸ் மற்றும் ... ஷாருக்கானுக்கு சாதனையாளர் விருது : சுவிட்சர்லாந்தில் வழங்கப்படுகிறது ஷாருக்கானுக்கு சாதனையாளர் விருது : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in