கார் ரேஸூக்காக 42 கிலோ எடை குறைத்தேன்: அஜித் பேட்டி | ரசிகர்கள் செய்த காரியத்தால் சூரி வேதனை | தமிழ் சினிமாவில் குறைந்து வரும் காமெடி…, ரைட்டர்கள் இல்லையா? | 3வது வாரத்திலும் முன்னேறும் 'டூரிஸ்ட் பேமிலி', பின்வாங்கும் 'ரெட்ரோ' | தக் லைப் : ஓடிடி, சாட்டிலைட் உரிமை இத்தனை கோடியா ? | ஸ்லிம் ரகசியத்தை கேட்டவர்களுக்கு குஷ்பு கொடுத்த பதில்! | மீண்டும் நடிப்புக்கு திரும்பிய எமி ஜாக்சன்! | ரவி மோகன் - கெனிஷாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த பாடகி சுசித்ரா! | பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத் தலைப்புக்கு சிக்கல்! | நடிகை சிம்ரனுக்கு துணையாக டிவி நடிகை ஆனந்தி |
கடந்த சில வாரங்களுக்கு முன்பு பாலிவுட்டில் சல்மான்கான் நடிப்பில் கிஸி கா பாய் கிஸி கி ஜான் என்கிற படம் வெளியானது. இந்த படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து தற்போது அவர் டைகர் 3 என்கிற படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார் சல்மான்கான். ஏற்கனவே சல்மான்கான் நடிப்பில் வெளியான ஏக்தா டைகர் மற்றும் டைகர் ஜிந்தகி ஆகிய படங்களைத் தொடர்ந்து டைகர் பட வரிசையில் மூன்றாவது படமாக உருவாகி வருகிறது இந்த டைகர் 3.
இதன் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 2021லேயே துவங்கப்பட்டு கொரோனா உள்ளிட்ட காரணங்களால் தடைபட்டு தற்போது மீண்டும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மனிஷ் ஷர்மா என்பவர் இயக்கிவரும் இந்த படத்தில் கதாநாயகியாக கத்ரீனா கைப் நடிக்க, வில்லனாக இம்ரான் ஹாஸ்மி நடிகிறார். தற்போது படப்பிடிப்பில் சல்மான்கானுக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது.
இதற்காக வித்தியாசமான வண்ணத்தில் தோளில் பேண்டேஜ் போடப்பட்டு படப்பிடிப்பில் தான் இருக்கும் ஒரு புகைப்படத்தை சல்மான்கான் தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கிண்டலாக வெளியிட்டுள்ள பதிவு ஒன்றில், “உலகத்தையே உங்கள் தோள்களில் தூக்கி வைக்க நினைக்கிறீர்களா ? அவ்வளவு வேண்டாம்.. ஐந்து கிலோ தம்புள்ஸ் ஒன்றை தூக்கி காட்டுங்கள்.. புலிக்கு காயம்பட்டு உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.