எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் | உங்களை ஏமாற்ற மாட்டேன் லாலேட்டா : மோகன்லால் மகளை அறிமுகப்படுத்தும் இயக்குனர் உறுதி | சினிமாவில் ஒரு வட்டத்துக்குள் சிக்க விரும்பவில்லை: கிரேஸ் ஆண்டனி | சுரேஷ் கோபி பட சென்சார் விவகாரம் : சனிக்கிழமை படம் பார்க்கும் நீதிபதி | கவுதம் ராம் கார்த்திக் படத்தில் இணையும் பிரபலங்கள் | மீண்டும் ஒரு லெஸ்பியன் படம் | வரி உயர்வு : ஆகஸ்ட் முதல் படங்களை வெளியிடப் போவதில்லை : புதுச்சேரி விநியோகஸ்தர்கள் அறிவிப்பு | இங்கே ஹோம்லி, அங்கே கவர்ச்சி : ராஷ்மிகாவின் அடடே பாலிசி | பிளாஷ்பேக்: வசுந்தரா தாசை நிராகரித்த மணிரத்னம் |
சமீப வருடங்களில் தென்னிந்திய அளவில் அனைத்து மொழிகளிலும் ஹைடெக்கான வில்லன் என்றால் கூப்பிடு ஜெகபதிபாபுவை என்று சொல்லும் அளவிற்கு பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் வில்லனாக நடித்து வருகிறார். அதேபோல எப்படி நடிகர் அஜித் தனது சால்ட் அண்ட் பெப்பர் ஹேர்ஸ்டைலை மாற்றாமல் நடித்து வருகிறாரோ, அதேபோல ஜெகபதிபாபுவும் பெரும்பாலும் அதேபோன்று சால்ட் பெப்பர் ஹேர்ஸ்டைலுடன் தான் தனது படங்களில் நடித்து வருகிறார். ஆனால் தற்போது சல்மான்கான் நடிப்பில் உருவாகியுள்ள கிஸி கா பாய் கிஸி கி ஜான் என்கிற படத்தின் மூலம் பாலிவுட்டிலும் நுழைந்துள்ள ஜெகபதிபாபு இந்த படத்திற்காக தனது முடியை டை அடித்து கருப்பாக மாற்றி நடித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, “இந்த படத்தில் எனது கதாபாத்திர தோற்றம் இப்படித்தான் இருக்க வேண்டும் என எதுவும் தீர்மானிக்கப்பட்டு இருக்க வில்லை. அதேசமயம் சல்மான்கானும் நானும் இந்த படத்தில் மோதும் காட்சிகள் இருக்கின்றன. இதனால் சல்மான்கான் என்னிடம் வந்து என்னுடைய தலைமுடிக்கு டை அடித்து கருப்பாக மாற்றினால் நன்றாக இருக்கும் என கூறினார்.
அதற்கு காரணமாக அவர் சொல்லும்போது, நான் சண்டையிடும்போது எதிராளி என்னை விட வயதானவராக காட்சியளித்தார் என்றால் அது பார்ப்பதற்கு அவ்வளவு நன்றாக இருக்காது. அதனால் உங்களை இன்னும் கொஞ்சம் இளமை தோற்றத்துடன் காட்டினால் அதில் நம்பகத்தன்மை இருக்கும் என்று கூறினார். இதில் எங்கேயும் அவர் என்னை வற்புறுத்தும் விதமாக, கட்டளை தொனியை வெளிப்படுத்தவே இல்லை. இதை ஒரு வேண்டுகோளாகவே அவர் என்னிடம் வைத்தார். அதனாலேயே நானும் ஒப்புக் கொண்டு நடித்தேன்” என்று கூறியுள்ளார் ஜெகபதிபாபு.